Tuesday, August 23, 2011

பீஜே என்ற பட்டப்பெயர் சரியா?

பீஜே என்ற பட்டப்பெயர் சரியா?


ஜைனுல் ஆபிதீன் என்ற அழகான பெயரை விட்டுவிட்டு பீஜே என்ற அர்த்தமில்லாத பெயரை ஏன் வைத்துக் கொண்டீர்கள்? பட்டப்பெயர் வைக்கக் கூடாது என்று தடை இருப்பதாகக் கேள்விப்படுகிறோமே?
முஹம்மத் இத்ரீஸ்.

பதில்
இஸ்லாத்தில் பட்டப் பெயர்கள் முழுவதும் தடை செய்யப்படவில்லை. ஒருவரிடம் உள்ள குறைபாட்டைக் குத்திக்காட்டும் வகையில் அல்லது அவரிடத்தில் இல்லாத குறையை அவருடன் இணைத்துப் பேசும் வகையில் அவருக்குப் பட்டப்பெயர் சூட்டுவதையே மார்க்கம் தடை செய்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக்காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் (49 :,12)
குட்டையாக ஒருவர் இருந்தால் அவரைப் பார்த்து "பெரியவர்' வருகிறார் என்று கேலி செய்வதும் கொஞ்சம் உயரமாக இருந்தால் "பனை மரம்' வருகிறது என்று பட்டப் பெயரிட்டு அழைப்பதும் கூடாது. இந்தப் பட்டப் பெயர்கள் மனிதனின் மனதை நோவினைப்படுத்தும் என்ற காரணத்துக்காக இவை தடை செய்யப்பட்டுள்ளன.
11 حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ رواه البخاري
அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி (11)

ஒருவரைப் பாராட்டி அவருக்கு நல்ல பட்டப் பெயர்களை வைப்பதும் ஒருவரை அறிந்து கொள்வதற்காக அவரை மட்டும் குறிக்கும் வகையில் அடையாளப் பெயர் வைப்பதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் இது போன்ற பெயர்களைக் கூறி அழைப்பதால் அழைக்கப்படுவர் நோவினை அடைய மாட்டார். இதை அவரும் பொருந்திக் கொள்வார். 
நபியவர்கள் காலத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு சைஃபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதை நபியவர்கள் தடை செய்யவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்களின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர் என்பதாகும். இது அழகான பெயர் தான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவர்களை பூனையின் தந்தை (அபூஹுரைரா) என செல்லமாக அழைத்துள்ளார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் பொருந்திக் கொண்டார்கள்.
எனவே யாருடைய மனதையும் புண்படுத்தாத இது மாதிரியான அடையாளப் பெயர்களை சூட்டுவது தவறல்ல.
அர்த்தமுள்ள பெயர் இருக்கும் போது அர்த்தமில்லாத பெயரை ஒருவர் பட்டப்ப்பெயராக வைத்துக் கொண்டால் அவரது பெயர் பறிபோய் விடாது.
பீஜே என்பது அர்த்தமற்ற சொல் இல்லை. பீ.ஜைனுல் ஆபிதீன் என்பதன் சுருக்கம் என்பதால் இதன் அர்த்தமும் ஜைனுல் ஆபிதீன் என்ற அர்த்தமும் ஒன்றுதான்.
நீங்கள் உட்பட அனைவரும் தந்தையின் பெயரை முதல் எழுத்தாக பயன்படுத்துகிறீர்கள். உங்கள் தந்தை பெயர் இப்ராஹீம் என்றால் ஐ என்று இனிஷியல் போட்டுக் கொள்கிறீர்கள். இப்ராஹீம் என்ற அழகான பெயரை விட்டு விட்டு உங்கள் தந்தைக்கு ஐ என்று பட்டப்பெயர் வைத்து விட்டதாக உங்களுக்குத் தோன்றுவதில்லை.
பீ.ஜைனுல் ஆபிதீன் என்று சொன்னாலும் எனது தந்தை பெயரை பீ என்று நான் சுருக்கியவனாக - அதாவது உங்கள் பாஷையில் அர்த்தமற்ற பட்டப் பெயர் வைத்தவனாக - ஆவேனே அது பரவாயில்லையா?
இப்படி உலகில் எல்லோருமே இனிஷியலைப் பயன்படுத்தி தங்கள் தந்தையின் பெயரைச் சுருக்கிக் கொள்கிறார்கள். என்னவோ தெரியவில்லை ஜைனுல் ஆபிதீன் எது செய்தாலும் கேள்வியாகி விடுகிறது. அவர் செய்வது போல் தாங்களும் செய்து கொண்டே கேள்வியும் கேட்கிறார்கள்.
ஒருவரது பெயர் முஹம்மத் என்றால் மூனா எனவும், சாஹுல் என்றால் சாவன்னா எனவும் அப்துல் காதிர் என்றால் ஆனா காவன்னா எனவும் சொல்லும் வழக்கம் உள்ளது. அதே பெயரைத் தான் சுருக்கிச் சொல்கிறார்களே தவிர பட்டப்பெயர் வைத்து விட்டார்கள் என்று ஆகுமா?
மேலும் கூடுதல் தகவலுக்காக சில பெயர்களை நினைவுபடுத்துகிறோம்.
முஹம்மத் என்ற அழகான பெயர் இருக்க புகாரி (புகாரா என்ற ஊர்க்காரர்) என்று பட்டப் பெயருக்குரியவர் தான் புகாரி இமாம். முஹம்மத் என்ற அழகான பெயர் இருக்க திர்மிதி (திர்மித் எனும் ஊர்க்காரர்) என்ற பட்டப்பெயருக்கு உரியவர் தான் திர்மிதி இமாம். இப்படி ஆயிரக்கணக்கானவர்களுக்கு இப்படி பெயர்கள் உள்ளன.




Monday, August 22, 2011

தவறான வாதங்களும் தக்க பதில்களும் -21

தவறான வாதங்களும் தக்க பதில்களும் -21

(21st August 2011)


ஐயமும் தெளிவும்

01.பெருநாளுக்கு ஆறு தக்பீர்கள் கூடுதலாக சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?
02.ஜகாத் கடமையானவர்தான் பித்ரா கொடுக்க வேண்டுமா?
03.தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்கள் தொடர்பாக புகாரியில் இடம் பெறும் 1147வது ஹதீஸ் தராவீஹ் தொடர்புடையது அல்ல! என்று பின்வரும் காரணங்களை கூறுகின்றனர்.
 தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்தில் மட்டும்தான் தொழப்படுகிறதே தவிர மற்ற மாதங்களில் தொழப்படுவதில்லை எனவே இந்த ஹதீஸ் தராவீஹ் தொழு கைக்கு பொருந்தாது. இந்த ஹதீஸ் ஒரு ஸலாமைக் கொண்டு நான்கு ரக்அத் தொழுததாகக் கூறப்படுகிறது. ஆனால் தராவீஹ் இரண்டு ரக்அத்க ளுக்கு ஒரு ஸலாம் என்ற அடிப்படையில் தொழப்படுகிறது.
 இந்த ஹதீஸ் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றியதாகும். ஏனெனில் தஹஜ்ஜத் தொழுகைதான் ரமாளானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழப்படு கிறது. இந்த ஹதீஸ் ரமலான் தொடர்புடையது அல்ல! என்பதால் தான் இதை தஹஜ்ஜத் (கியாமுல் லைல்) என்ற தலைப்பில்

ஹதீஸ் நூல் ஆசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?

பெருநாளுக்கு ஆறு தக்பீர்கள் கூடுதலாக சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?
பெருநாள் தொழுகையில் கிராத் ஓதுவதற்கு முன்னர் மூன்று தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்களில் கிராத் ஓதியதற்கு பின்னர் மூன்று தக்பீர்களும் சிலர் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக கூறுகின்றனர்.
 நான் அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோ ரிடம் நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளில் எத் தனை தக்பீர்கள் கூறினார்கள்? என வினவினேன். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறுவதைப் போன்ற நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள் அபூமூஸா உண்மைக் கூறினார் என்று சொன்னார்கள்.
 அறிவிப்பவர் : ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (973)
 அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அவர்கள் அமர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு அருகில் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமூஸா (ரலி) அவர்களும் அமாந்திருந்தார்கள். அப்போது ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இவர்களிடம் பெருநாள் தொழுகையின் தக்பீர்களைப் பற்றி கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதை அபூமூஸா (ரலி) அவர் களிடம் கேளுங்கள் என்றார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள் இதைப் பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில் அவர்கள் நம்மைவிட முந்தியவர் மேலும் நம்மில் மிகவும் அறிந் தவர் என்று கூறினார்கள். எனவே ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறுவார். பின்னர் கிராத் ஓதுவார். பின்னர் ருகூவு செய்வார். பிறகு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து நின்று கிராஅத் ஓதுவார். கிராஅத்திற்கு பின்னர் நான்கு தக்பீர்கள் கூறுவார் என்று பதிலளித்தார்கள்.
லைலதுல் கத்ரின் சிறப்புகள்
 ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்...

 மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
 முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (35)
 லைலத்துல் கத்ரு எந்த நாள்?
 லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்'' என்றார்கள்.
 அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
 நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவுதான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

ஃபித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்)

ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்
  பீ. ஜைனுல் ஆபிதீன்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமா கும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர் மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்ட ரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்
 இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமை யாக்கப்பட்டுள்ளது.
 நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாக வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கி னார்கள்.
 அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817
 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்க ளின் சார்பில் வழங்கும்போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
 கொடுக்கும் நேரம்
 மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
 நூல்: புகாரி 1503, 1509
 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக் குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
 பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
 பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாள்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.
 பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும்போது, பெரு நாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்'' என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.
 ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று நான் கூறி னேன். அதற்கு அவன் எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது'' எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று கேட்டார்கள். அல் லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்'' என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்'' என்று கூறினேன். எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்'' என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்றபோது, உன் கைதி என்ன ஆனான்?'' என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்றுதான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டு வதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை'' என்று சிலர் வாதிடு கின்றனர். இந்த வாதம் தவறாகும்.
 ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் 'ரமளான் ஜகாத்' என்ற சொல் ஃபித்ராவை மட்டும்தான் குறிக்கும்.
 இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
 ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
  ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்தினார்கள்'' என்பது ஃபித்ராவைத்தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக் கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
 எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது. எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட் டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்ன தாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.
 ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள் ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாள்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
 நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக மையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
 எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித் ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும்வரை அதன் கடைசி நேரம் உள்ளது.
 ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்
 ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
 ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்க ளில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.
 (புகாரி 1395, 1496, 4347)
 அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்குதான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
 இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.
 அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?
 முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.
இரண்டாவது கருத்தில்தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்ப தைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தின ரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். இது உங்களுக்கு உரி யது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது'' என்று அவர் கூறினார்... (புகாரி 6979)
 பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதி யைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸி லிருந்து அறியலாம்.
 எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.
 மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
 வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக் கும் பகுதிக்கு அனுப்பினால்தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்

உணர்வு 15-51

உணர்வு ஆன்லைன் எடிசன் 15-51
(August 19-25- 2011)

உணர்வு 15-50

உணர்வு ஆன்லைன் எடிசன் 15-50
(August 12-18- 2011)

 


Sunday, August 21, 2011

பி.ஜே அவர்களின் 2011 ரமளான் தொடர் உரை

தவறான வாதங்களும் தக்க பதில்களும்
 ரமளான் தொடர் உரை-வீடியோ
 சொற்பொழிவு.
பி.ஜே.
பாகம் ஒன்று முதல் பத்து வரை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்

PART 11

PART 12


PART 13
 


PART 14



PART 15

PART 16


PART 17


PART 18


PART 19

PART 20

Tuesday, August 16, 2011

Monday, August 15, 2011

Sunday, August 14, 2011

முஸ்லிம்களை நீங்கள் கூறுபோட்டது ஏன்?

இஸ்லாத்தில் ஏன் பிரிவினைகளை ஏற்படுத்துகிறீர்கள். உங்களால் பல முகல்லாக்கள் இரண்டுபட்டு விட்டது இது சரியா?

தில்
தவ்ஹீத் பிரச்சாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட பிரிவினை இஸ்லாத்தில் ஏற்பட்ட பிரிவினை அல்ல. இஸ்லாத்தின் நன்மைக்காக ஏற்பட்ட பிரிவினை.
தவ்ஹீத் வருவதற்கு முன்பு தமிழகத்தில் அனைத்து முகல்லாக்களும் சத்தியத்தில் ஒன்றாய் இருந்து நாம் வந்த பிறகே அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டால் தான் இஸ்லாத்தில் ஒன்றாய் இருந்தவர்களைப் பிரித்து விட்டீர்களே என்று குறை கூற முடியும்.
ஆனால் அந்த நேரத்தில் இப்படிப்பட்ட நிலை இருக்கவில்லை. எல்லா பகுதிகளிலும் ஊர் ஜமாத்தார்கள் மக்களை அசத்தியத்தில் கட்டிப்போட்டு வைத்திருந்தனர். அப்போது மக்கள் இணைவைப்புக் காரியங்களையும் பித்அத்தான அநாச்சாரங்களையும் சமூகத் தீமைகளையும் அரங்கேற்றுவதில் தான் ஒன்றுபட்டு இருந்தனர்.
தவ்ஹீத் பிரச்சாரம் வந்த பிறகு இந்த கூட்டத்திலிருந்து கணிசமான மக்கள் தாங்கள் செய்தது தவறு என்பதை உணர்ந்து ஏகத்துவத்தின் பக்கமும் நபிவழியின் பக்கமும் திரும்பினர். இப்படி அவர்கள் பிரிந்து வந்தது நல்லதா? கெட்டதா? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பிரிவினை ஏற்பட்டதன் விளைவு முன்பு சமூகத்தில் மிகவும் விமரிசையாக அரங்கேறிய பயங்கரமான தீமைகள் பல இடங்களில் காணாமல் போய்விட்டன. பல இடங்களில் குறைந்து போயுள்ளன. இஸ்லாம் இதைத் தானே எதிர்பார்க்கின்றது.
எனவே தவ்ஹீத் பிரச்சாரம் இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தவில்லை. மாறாக அசத்தியத்திலிருந்து மக்களை நல்வழிப்படுத்தி இஸ்லாத்தை நிலைநிறுத்தியுள்ளது.
நம்முடைய இம்மை மறுமை வாழ்வு சிறக்க இது அவசியமானது. இந்த பிரிவினை அவசியம் என்று குர்ஆனும் நபிமொழியும் வலியுறுத்துகின்றது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு

onlinepj.cpm