Wednesday, October 26, 2011

உணர்வு 16-08

உணர்வு
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்
உரிமை16 குரல் 08
October 21-27,2011
Unarvu Tamil Weekly.

Monday, October 24, 2011

இமயம் டிவி வீடியோ

இமயம் டிவி டிசம்பர் 2011

கோவை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


இறுதி நபித்துவம் காத்த கோவை விவாதம்



இமயம் டிவி நவம்பர் 2011

மரம் வளர்ப்போம் நன்மை பெருவோம்

 

வளைகுடாவில் ஏகத்துவ எழுச்சி



வருமுன் காப்போம்




திண்டுக்கல் இனிய மார்க்கம் 5



இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
(திண்டுக்க​ல்)
பாகம் 5 12-11-2011 இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ




சமூக பணிகளில் ஆர்வம்


சமூக பணிகளில் ஆர்வம் கொள்வோம் -- 11-11-11 இமயம் டிவி நிகழி்ச்சி விடியோ


இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4



இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (தேவகோட்டை பாகம்-4) 10-11-2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ



வளைகுடா அவளங்கள்


வளைகுடா அவளங்கள் பாகம் -- 2 (9-11-2011​) இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ


அல்லாஹ்வை பெருமை படுத்துவோம்

அல்லாஹ்வை பெருமை படுத்துவோம் 2011 ஹஜ் பெருநாள் உரை" 8-11-2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ
 

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு 2


வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு (பாகம் 2) 7.11.2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ




வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு 01  



வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு பாகம் -- 1 6.11.2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ

இனிய மார்க்கம் 2 (திண்டுக்க​ல்)

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (திண்டுக்க​ல்) 5-11-2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ


இப்ராஹீம் நபியின் பிரச்சாரம் பாகம் 3 

இப்ராஹீம் நபியின் பிரச்சாரம் பாகம் 3 -- 4.11.2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ

 
இனிய மார்க்கம்
(தேவகோட்டை​) 3


இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (தேவகோட்டை​) 3-11-2011 இமயம் டிவி நிகழ்சசி வீடியோ




வளைகுடா அவளங்கள் 02

வளைகுடா அவளங்கள்" 2-11-2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ




நபிகளார் கற்று தந்த துஆக்கள்
01-11-11 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ


மறதி (Jummah Bayan)
மறதி" 30-10-2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ




இனிய மார்க்கம் (திண்டுக்க​ல்)
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (திண்டுக்க​ல்) 29-10-2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ



இப்ராஹீம் நபியின் பிரச்சாரம் -2


இப்ராஹீம் நபியின் பிரச்சாரம் பாகம் 2, 28-10-2011 இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ


 
 
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 03

(தொடர்ச்சி​)
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (தேவகோட்டை​) தொடர்ச்சி -- 27-10-2011 இமயம் டிவி நிகழ்சசி வீடியோ




இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 02
(தொடர்ச்சி​)

(தேவைகோட்டை)
26-10-2011
இமயம் டிவி நிகழ்ச்சி விடியோ.



இம்மையை விட மறுமையே சிறந்தது
25-10-2011
இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ




மறுமை சிந்தனை

(மதுரை)
23-10-2011
இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ

மறுமை சிந்தனை 02 (தொடர்ச்சி​)

24-10-201​1
இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ



 முன்னோர்கள் வழியா நபி வழியா
இமயம் டிவி அக்டோபர் 2011 முன்னோர்கள் வழியா நபி வழியா -- (அம்மா பட்டிணம்) என்ற தலைப்பில் கடந்த 16-10-2011 அன்று இமயம் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ

முத்துப்பேட்டை ஆர்ப்பாட்டம்,முன்னோர்கள் வழியா நபி வழியா தொடர்ச்சி -- 18-10-2011 இமயம் டிவி வீடியோ


தவ்ஹீத் நகரம் -- கிராமத்தோடு தவ்ஹீத் கொள்கைக்கு மாறிய ஊர்- 19-10-2011 இமயம் டிவி வீடியோ Imayam-19-10-2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் தேவகோட்டை -- 20-10-2011 இமயம் டிவி வீடியோ

இப்ராஹீம் நபியின் பிரச்சாரம்" -- 21-10-2011 இமயம் டிவி நிகழ்ச்சி வீடியோ

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (திண்டுக்கல்)
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (திண்டுக்கல்) – 22-10-2011 இமயம் டிவி நிகழ்ச்சி
 

வாராந்த உரை

வாராந்த உரை , தோஹா, அல் லக்தா (கட்டார்)
21th Oct 2011
 தலைப்பு :குர்பானும் மிருகவதையும்
உரை : மௌலவி முஹம்மத் ரிஸ்கான் ரஷீதி
(பொலன்னறுவை, இலங்கை)
 

உணர்வு 16-07

உணர்வு
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்
உரிமை16 குரல் 07
October 14-20,2011
Unarvu Tamil Weekly.

 

Thursday, October 20, 2011

அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்

அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்

(ஏப்ரல் 2007) (தொடர் 1)
அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.சி.
சில வருடங்களுக்கு முன்னால் நமது அனைத்து முயற்சிகளும் இணை வைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை ஒழிப்பதற்காக முடுக்கி விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் எதிர் கொள்கையில் இருந்தவர்கள் நமது பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார்கள். இதையெல்லாம் முறியடித்து மக்களை வென்றெடுத்தோம், அல்ஹம்து லில்லாஹ்!
ஆனால் நம்முடன் சேர்ந்து இக்கொள்கையைப் பரப்பியவர்கள் இன்று நமது சொற்பொழிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முட்டுக் கட்டையாக மாறியுள்ளனர். இயக்க வெறியும், பொறாமையும், குரோதக் கண்ணோட்டமும் இவர்களைத் தூண்டிவிட்டு குராஃபிகளுக்கு வேலையில்லாமல் இவர்களைச் சதி செய்ய வைக்கிறது.
குர்ஆன், ஹதீஸ் இந்த இரண்டை மாத்திரம் சொன்னால் தான் மக்கள் தம்மை அங்கீகரிப்பார்கள் என்பதை உணர்ந்துள்ள இவர்கள் ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் நம்மை வசை பாடுகிறார்கள். விதிவிலக்காக நல்லெண்ணத்துடன் நமது கருத்தை விமர்சிப்பவர்களும் இருக்கலாம்.
"அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லாத ஹதீஸாக இருந்தாலும் அதற்குச் சரியான எந்த ஒரு விளக்கமும் கொடுக்க இயலாத வகையில் அது குர்ஆனுடன் மோதுமானால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற அடிப்படையை நாம் கூறி வருகிறோம். இதன் அடிப்படையில் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை ஏற்கக் கூடாது என்று எழுதி வருகிறோம்.
இதை அங்கீகரிக்காதவர்கள் நாம் கூறிய இந்த அடிப்படை, யாரும் கூறாத ஒன்று; ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதியே இல்லை; மனோ இச்சைப்படி ஹதீஸை மறுப்பதற்காக இந்த வழிகளைத் திறந்து விடுகிறார்கள் என்று கூறி தங்களது அறியாமையை வெளிப்படுத்தினார்கள்.
விரலை ஒடித்தாலும் ஹதீஸைச் செயல்படுத்துவோம்; அவ்ஸில் தூக்கிப் போட்டாலும் ஹதீஸைச் செயல் படுத்துவோம்; தாய், தந்தையர் பேசாவிட்டாலும் பரவாயில்லை ஹதீஸ் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி நிரூபித்துக் காட்டிய இந்த ஜமாஅத்தைப் பார்த்து ஹதீஸை மறுக்கிறார்கள் என்ற அவதூறு இவர்களால் சமீபத்தில் கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த விமர்சனம் வேரில்லாத மரம் என்பதைப் பின்வரும் சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Monday, October 17, 2011

உணர்வு 16-06

உணர்வு
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்
உரிமை16 குரல் 06
October 07-13,2011
Unarvu Tamil Weekly.

Sunday, October 16, 2011

வாராந்த உரை , தோஹா, அல் லக்தா (கட்டார்)

வாராந்த உரை , தோஹா, அல் லக்தா (கட்டார்)
14th Oct 211
 தலைப்பு :ஹஜ் குர்பானியின் சட்டங்கள்
உரை : மௌலவி முஹமத் அலி MISC.






வாராந்த உரை , தோஹா, அல் லக்தா (கட்டார்)
07th Oct 211
 தலைப்பு :அல்லாஹ்வுக்கு நன்றி உடையவனாக இருப்போம்
உரை : மௌலவி லாஹிக் ,(புத்தளம் ,இலங்கை)



Monday, October 10, 2011

கிருத்துவர்களை மூச்சுத் திணற வைத்த விவாதம்:

கும்பகோணத்தில் சில பாதிரியார்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு விவாதம் நடந்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் பங்குகொண்ட நம் மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்கள். வழக்கம் போல வல்ல இறைவன் அந்த விவாதத்திலும் நமக்கு வெற்றியையே தந்தான்.

அந்த விவாதங்கள் சீடியாக வெளியிடப்பட்டு மக்கள் கிருத்துவத்தின் பொய்மையை அறிந்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த விவாதத்தின் விவரங்கள் உணர்வு வார இதழிலும் தொடராக வெளிவந்து பரபரப்பை உண்டாக்கியது. இந்தத் தொடரை நிறுத்தி விடுங்கள் என்றெல்லாம் சில பாதிரியார்கள் நம் சகோதரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த சீடியை முழுமையாகப் பார்த்த சில பாதிரியார்கள் நம் தலைமையகத்திற்குக் கடிதம் எழுதினார்கள்.
நீங்கள் வாயில்லாப் பிள்ளைப்பூச்சிகளிடம் விவாதம் செய்து விட்டு அதைப் பெருமையாக பீற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் மவுனம் சாதித்த கேள்விகளுக்கு நாங்கள் அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் காத்திருக்கிறோம். 5 மற்றும் 6 ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் நாங்கள் விவாதிக்கத் தயார் என்றும் கடிதம் அனுப்பியிருந்தனர். அவர்களின் அழைப்பை அன்போடு ஏற்றுக் கொண்டு 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது விவாதம் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் கிறித்தவர்களின் வேதம் குறித்து முஸ்லிம்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு கிறித்தவர்கள் பதிலளிக்க வேண்டும். இது இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும்.அதன் பின்னர் முஸ்லிம்களின் வேதம் குறித்து கிறித்தவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு முஸ்லிம்கள் பதிலளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்ட்து.
முதல் தலைப்பிலான விவாதம் இம்மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் நடத்துவது என்றும் ஆறாம் தேதி விவாத முடிவில் இரண்டாம் தலைப்புக்கான தேதியை முடிவு செய்வது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இரு புறமும் தலா இருபது பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. சகோ.ஜெபக்குமார் தலைமையில் சகோ. சுதன்பாண்டியன், சகோ.மதிவானன், சகோ.பன்னீர்செல்வம், சகோ.சுரேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும், சகோ. கலீல் ரசூல் தலைமையில், சகோ. கோவை சகோ.ரஹ்மத்துல்லாஹ்,சகோ. சையது இப்ராஹீம்,சகோ.யூசுஃப்,சகோ. தாங்கல் ஹபிபுல்லா,சகோ. E. பாரூக் மற்றும் பலரும் கலந்து கொள்ள விவாதம் துவங்கியது.
விவாதத்தின் முதல் அமர்வில் பைபிளில் மனிதச் சரக்குகள் கலந்துள்ளது என்றும், பைபிள்  7 முறை புடம்போடப்பட்டும் இன்னும் தவறுகள் இருக்கின்றன என்றும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும், அத்தோடு நாங்களும் நூற்றுக்கும் அதிகமான வசனங்களை நீக்கி விட்டோம் என்றும் போட்டு உடைத்தனர் கிருத்தவ விவாதக் குழுவினர். ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியதும் நம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மூச்சுத் தினறினார்கள் பாதிரிமார்கள்.
பைபிளில் இருந்து இன்னும் கூட வசனங்கள் நீக்கப்படும் என பகிரங்கமாக  ஒப்புக் கொண்டனர் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். இப்படியாக போய்க் கொண்டிருந்த விவாதத்தில் சில வசனங்களுக்கு விளக்கம் கேட்க, அவர்கள் கொடுத்த சமாளிப்பு அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியது. இறுதியில் பைபிளில் உள்ள ஆபாசங்களை நம் சகோதரர்கள் அள்ளிக் கொட்டிய போது அவர்களிடம் இருந்து பதில் என்ற பெயரில் வந்த விளக்கங்கள் பார்ப்பவர்களை திகைக்க வைத்தது.
பைபிள் வசனங்களைப் படித்துக் கொண்டிருந்த பெண்களை ஒரு கட்டத்தில் பைபிளில் உள்ள உன்னதப்பாட்டுஅதிகாரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட போது அவர்கள் திக்கித் திணறி தலை குணிந்ததைப் பார்க்க முடிந்தது. ஆபாசங்கள் நிறைந்த அத்தியாயங்களைப் படிக்கப் படிக்க அவர்கள் சார்பில் வந்திருந்த பெண்கள் நெளிய ஆரம்பித்தனர்.
பெண்களின் முன்னிலையில் படிக்க முடியாத இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படி இறைவேதமாக நம்புகிறீர்கள் என்று நம் விவாதக் குழுவினர் கேட்ட போது அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சம்பந்தமே இல்லாதவற்றைப் பேசி காலத்தைக் கடத்தினர் கிருத்துவர்கள்.
நேரம் ஆக ஆக பதில் சொல்லமுடியாமல் இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இப்படி விவாதம் போய்கொண்டிருன்ந்த போது ஒரு கட்டத்தில் இரண்டு நாட்கள் விவாதக்க ஒப்புக் கொண்டு வந்த கிறித்தவர்கள் ஒரு நாளிலேயே விவாத்ததை முடித்துக் கொள்வோம். அப்படித்தான் நாம் முடிவு செய்தோம் என்று பல்டி அடித்தனர்.
காலையில் விவாதம் துவங்கிய போது அவர்கள் சொன்ன ஒரு தகவலுக்கு நம் தரப்பில் ஆதாரம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நாளை விவாத்ததுக்கு வரும் போது கொண்டு வருகிறோம் என்று பதில் அளித்தனர். இது விவாத சீடியில் பதிவாகியுள்ளது. இதில் இருந்து அவர்கள் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு தான் வந்தனர் என்பதை நீங்கள் அறியலாம். முதல் நாள் இறுதியில் பேசும் போது ஒரு நாள் விவாதம் என்று தான் பேசப்பட்டது என்றனர். மேலும் அடுத்த தலைப்புக்கான தேதி குறித்து பேசவும் அவர்கள் விரும்பவில்லை.
முதன் முதலில் கிறித்தவர்களின் பெந்த கொஸ்தே குரூப்பைச் சேர்ந்த ஜெபமணி என்பவருடன் நாம் விவாதம் நடத்தினோம்.கும்பகோனத்தில் ஆர்சி எனப்படும் கத்தோலிக்க பிரிவினருடன் விவாதம் நடத்தினோம்.ஜெரி தாமஸ் வகையறாக்கள் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் இவர்கள் அனைவரையும் விட பைபிள் அறிவாளிகளாகவும் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்களாகவும் தங்களை கூறிக் கொள்ளும் யஹோவா விட்னஸ் என்ற பிரிவினருடன் யாரும் விவாதிக்க முடியாது. அவர்கள் பைபிளைக் கரைத்து குடித்தவர்கள் என்ற கருத்து கிறித்தவ மக்களிடம் உள்ளது. இப்போது நாம் நடத்திய விவாதம் இந்த யஹோவா பிரிவினருடன் தான் .
இதன் மூலம் கிறித்தவர்களின் அனைத்து பிரிவினருடனும் தவ்ஹீத் ஜமாஅத் விவாதக் களம் கண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். நடந்து முடிந்த மூன்றிலும் அல்லாஹ் மாபெரும் வெற்றியை அளித்தான். இனி நடக்கவுள்ள விவாதங்களிலும் அல்லாஹ் வெற்றியை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்
இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.


பாகம்:1


பாகம்:2

பாகம்:3
 
 பாகம்:4



பாகம்:6





பாகம்:7
பாகம்:5

Thursday, October 06, 2011

கேள்வி பதில்

கசகசா என்ற பொருளை உணவில் சேர்த்து பயன்படுத்தலாமா?

கசகசா என்ற பொருள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்களும் பெரும்வாரியாக இதை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள்.
இந்த கசகசா வை ஆங்கிலத்தில் POPPYSEED என்று கூறுகின்றனர்.
இந்த பாப்பி விதை எனப்படும் கசகசா என்பது பாப்பி செடியில்(அபினிச் செடியின் விதைகள்.)விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்
அதுதான் ஓபியம் என்ற போதைப் பொருள்.
இந்த கசகசாவை ஓராளவுக்கு மேல் சாப்பிட்டால் போதையை கொடுக்கும். இதனால்தான் துபாய், கத்தார், குவைத், ஓமான், சவூதி
அரேபியா, சிங்கப்பூர், மலோசிய போன்ற நாடுகளில் இந்த கசகசா போதை பொருள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த நாடுகளுக்கு கசகசாவை கொண்டு சென்று பிடிப்பட்டால் சிறை தண்டனை நிச்சயம்.
கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009லிம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004லிம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியத் கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய்
அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!
இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார். கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.
என்று இணையதள செய்திகள் நமக்கு தெரியப்படுத்துகிறது.
போதைப் பொருட்கள் எல்லா வகைகளையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் "பித்உ' (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் :புகாரி (5585)
நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்கüடம் விசாரித்தேன். அதற்கு
அவர்கள் "அவை யாவை?'' என்று கேட்டார்கள். நான் "அல் பித்உ, அல் மிஸ்ர்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல் :புகாரி (4343)
கசகசா என்பது அதிகம் சாப்பிட்டால்தானே போதை வருகிறது. நாம் குறைவாகத்தானே பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழி கவனிக்கட்டும்.
1788 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ رواه الترمذي
அதிகமா (உண்டால்) போதை தரக்கூடியதில்  குறைவானதும் ஹராமாகும் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : திர்மிதீ (1788)
எனவே கசகசா என்ற பொருள் சேர்க்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதே சரியான வழியாகும்.