Tuesday, May 31, 2011

ஜகாத்


ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா


ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா?

பதில்
இந்தக் கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் இஸ்லாத்தின் முக்கியமான  ஒரு அடிப்படையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கருத்துக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரம் இல்லையென்றால் அது ஒரு போதும் மார்க்க அங்கீகாரத்தைப் பெறாது.
உலகில் உள்ள மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாக அது இருந்தாலும் சரியே. நீ குர்ஆன் ஹதீஸை கடைப்பிடித்தாயா? என்று தான் இறைவன் மறுமையில் நம்மிடம் கேட்பான். அறிஞர்கள் கூறிய கருத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று கேட்க மாட்டான்.
குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை அறிஞர்களின் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தினால் நீ ஏன் இதைப் பின்பற்றினாய்? என்று தான் இறைவன் மறுமையில் கேட்பான். எனவே கொடுத்த பொருளுக்கு மறுபடியும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. அப்படியிருக்க அறிஞர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என்பதற்காக கொடுத்த பொருளுக்கு மறுபடியும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினால் இறைவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது.
ஸகாத் விஷயத்தில் நம்முடைய இந்த நிலைபாட்டை மறுப்பவர்கள் நமக்கு முன் ஒரு அறிஞர் கூட இந்தக் கருத்தை கூறவே இல்லை என்று பேசி வருகின்றனர். இவர்களின் இந்த வாதம் சத்தியத்தை அறிய உதவாது என்றாலும் இது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். ஒரு பொருளுக்கு ஒரு முறை மட்டுமே ஸகாத் கடமை என்ற சட்டத்தை அனைத்து செல்வங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்பது நமது நிலைபாடு.
நமக்கு முன்னால் வாழ்ந்த சில அறிஞர்கள் அனைத்து செல்வங்களுக்கும் இவ்வாறு கூறாவிட்டாலும் சில விஷயங்களில் நமது கருத்தையே கூறியுள்ளனர்.
உரிமையாளரால் தீனி போடப்பட்டு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அவற்றின் ஆயுளில் ஒரு முறை மட்டுமே ஸகாத் உண்டு என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஆபரணங்களுக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்படும் கால்நடைகளுக்கும் ஒரு முறை ஸகாத் கொடுத்துவிட்டால் மறு தடவை கொடுக்க வேண்டியதில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட பயிர்களுக்கும் ஒரு முறை மட்டுமே ஸகாத் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தகவல்களை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்முஹல்லா என்ற தனது சட்ட ஆய்வு நூலில் ஸகாத்துடைய பாடத்தில் பதிவு செய்துள்ளார். (பாகம் : 6 பக்கம் : 47)
அணியப்படும் ஆபரணங்களில் ஒரு முறை மட்டுமே ஸகாத் என்று நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தத் தகவல் பைஹகீயில் 7331 வது செய்தியாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதில் யாரும் மாற்றுக் கருத்து கொண்டதில்லை என்ற வாதம் பொய்யானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
onlinepj

Monday, May 30, 2011

முரண்பாடுகள் களைவோம்.


முரண்பாடுகள் களைவோம்.
பி.ஜே

(அல்ஜன்னத் மாத இதழில் பீஜே ஆசிரியராக இருந்த போது அவர் எழுதிய கட்டுரை- திருத்தங்களுடன்)


திருக்குர்ஆனையும். நபிவழியையும் மட்டுமே தங்கள் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் முரண்படும் எவரது கருத்தையும் நிராகரித்து விடும் கடமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதில் சர்வ அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.
இதெல்லாம் சாதாரண விஷயங்கள் என்று தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படையே இவர்களுக்குச் சாதாரணமாகத் தோன்ற என்ன காரணம்?
 திருக்குர்ஆனையும் நபிவழியையும் புறக்கணிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படிச் செய்கிறார்களா? இல்லை இத்தகைய அலட்சியப் போக்கை ஏற்படுத்துவதற்காகவே சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பல பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் சொன்னதாக சிலரால் உருவாக்கப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் (?) தான் இந்தச் சமுதாயம் குர்ஆன் ஹதீஸைப் புறக்கணித்துச் செல்லக் காரணமாகி விட்டன.
 அவற்றில் அதிக அளவில் மவ்லவிகளால் அரங்கேற்றப்படும் ஒரு ஹதீஸை (?) நாம் ஆராய்வோம். அந்த ஹதீஸ் மேடைகள் தோறும் சமீபகாலமாக முழங்கப்படுகின்றன. ஏடுகளில் எழுதவும்படுகின்றன. தங்களின் தவறான போக்குகளை நியாயப்படுத்திட அந்த ஹதீஸ் (?) இவர்களுக்கு பெரிதும் துணையாக இருக்கின்றது. சாதாரணமாகச் சிந்தித்துப் பார்ப்பவனுக்கும் கூட பொய்யென்று தெரிந்துவிடும் இந்த நச்சுக் கருத்தை துணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் சொல்ல எப்படித் துணிந்தார்கள்? வேண்டுமென்றே இதைக் கூறுகிறார்களா? அல்லது அறியாமை இருளில் அவர்கள் சிக்கிக் கொண்டார்களா? என்பது நமக்குப் புரியவில்லை

Thursday, May 26, 2011

Tuesday, May 24, 2011

கடனும் அதன் சட்ட திட்டங்களும்.

இஸ்லாத்தின் பார்வையில் கடனும்
அதன் சட்ட திட்டங்களும்
ஸலாஹுத்தீன், கெக்கிராவ, இலங்கை.

அல்லாஹ் இவ்வுலகத்தில் மனிதர்களை, சிலரைப் பணக்காரர்களாகவும் சிலரை ஏழைகளாகவும் படைத்துள்ளான். ஏழைகளாக இருப்பவர்கள் தம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் வேறு சில வேலைகளுக்காகவும் சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகிறார்கள்.இவ்வாறு கடன் வாங்குபவர்களும் கொடுப்பவர்களும் பெரும்பாலும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. திருக்குர்ஆனும் நபிமொழிகளும் இது தொடர்பாகக் காட்டும் வழிமுறைகளைத் தெரிந்து அதன்படி செயல்படுவோம்.
ஆடம்பரத்திற்குக் கடன்
தம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பணம் இல்லாத போது கடன் வாங்குவது குற்றமாகாது. அதே நேரத்தில் ஆடம்பரமாக வாழ்வதற்கு, ஆடம்பரப் பொருள்களை வாங்குதற்காகக் கடன் வாங்குபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.
இன்று ஆடம்பரப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்களாக நினைக்கத் துவங்கி விட்டனர்.
டி.வி., செல்போன், வாசிங் மிஷின், ஃபிரிட்ஜ் இது போன்ற பொருள்களை வாங்குவதற்குத் தான் பெரும்பாலும் கடன் வாங்குகிறார்கள். இவைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று நாம் கூறவில்லை. பணம் இல்லாமல் இருக்கும் போது கடன் வாங்கி இவற்றை வாங்க வேண்டுமா? என்றே கேட்கிறோம்.
இது போன்ற ஆடம்பரப் பொருள்களை கடனுக்கு வாங்கி, கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனால் மறுமை நாளில் நமது நிலை என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். மேலும் சிலர் இந்த ஆடம்பரப் பொருள்களை வட்டிக்கு வாங்கிப் பயன்படுத்துவோரும் உண்டு. இவைகள் இல்லாவிட்டால் நாம் உயிர் வாழ முடியாதா? என்பதைச் சிந்திக்கட்டும்.

Monday, May 23, 2011

அழைப்புப் பணியின் அவசியம்



உரை : ரஹ்மதுல்லாஹ்
தலைப்பு : அழைப்புப் பணியின் அவசியம்