Monday, May 30, 2016

கத்தர் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 2016

"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல் குர்ஆன்: 5:32)

கடந்த 27-05-2016 வெள்ளிகிழமை அன்று (QITC) ‎கத்தர் மண்டலம்‬ சார்பாக (ஹமத் மருத்துவமனை உடன் இணைந்து) மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது.


ஜூம்மா தொழுகையின் பின்னர் மதிய உணவுடன் பிற்பகல் இரண்டு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஒன்பது மணிவரை நடைபெற்றது.

இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் இரத்த தானம் வழங்க வருகை புரிந்தனர். குறிப்பாக ‪ இந்திய‬ ‎இலங்கை‬ ‎முஸ்லிம்‬ மற்றும் ‪‎மாற்றுமத‬ சகோதரர்கள் ஆர்வத்துடன் குருதி கொடை முகாமில் கலந்து கொண்டார்கள்.

வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ‎ஹமத் மருத்துவ‬ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் ‪இரத்ததானம்‬ அளிக்க அனுமதிக்கப்பட்டனர். மக்கள் வெள்ளம் அலைமோதிய நிலையில் நேரம் போதாமை போன்ற காரணங்களினாலும்‪ நூற்றி பதினேழு‬ நபர்கள் மாத்திரமே தங்களின் குருதிக்கொடைகளை வழங்கினர்.

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற ஹமத் மருத்துவமனை‬ ‪இரத்த வங்கி‬ ‪மருத்துவர்கள்‬,‪ செவிலியர்கள்‬, ‪ஆய்வாளர்கள்‬ என 11 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும் QITC மர்கஸ்க்கு அனுப்பி இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.


‪‎கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்‬ சார்பாக குருதி கொடையளித்த‬ சகோதர்களுக்கும்‬, ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது‪ இதயம் கனிந்த‬ ‪‎நன்றிகளை‬ தெரிவித்துகொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்...


































Sunday, May 08, 2016

பெண்களின் உரிமைகள்

ஆண்களுக்கு அவர்கள் பாடு பட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:32

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபியவர்களின் மனைவியாக வருவதற்கு முன்னால் அபூஸலமாவின் மனைவியாக இருந்தார்கள். அபூஸலமாவின் மூலமாகச் சில குழந்தைகள் உம்மு ஸலமாவுக்கு இருந்தன.

நபியவர்கள் குடும்பச் செலவிற்காக உம்மு ஸலமாவிற்குக் கொடுக்கும் தொகையில் தனது முன்னால் கணவர் அபூஸலமா மூலமாகப் பெற்றெடுத்த தனது பிள்ளைகளுக்குச் செலவு செய்தால் நன்மை கிடைக்குமா? என நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் கூலி கிடைக்கும் என்று சொன்னார்கள். தடையேதும் போடவில்லை.
அப்படியெனில் கணவனிடமிருந்து மனைவிக்குக் கிடைத்த பொருளா தாரத்தில் அந்தக் கணவருக்குச் சம்பந்தமில்லாத குழந்தைகளுக்கு, அதாவது வேறொரு கணவன் மூலமாகப் பெற்றெடுத்த குழந்தைகளுக்கும் தாய் என்ற அடிப்படையில் செலவு செய்தால் அது கூடுதலான கூலியை இறைவனிடம் பெற்றுத் தரக்கூடிய காரியம் எனப் புரிந்து கொள்ளலாம்.
கணவனின் அனுமதி தேவையில்லை, செலவழித்துக் கொள்ளலாம், மறுமையில் கூலியும் கிடைக்கிறது. இதுவும் இஸ்லாம் பெண்களுக்குச் செலவு செய்வதற்காக வழங்கியுள்ள உரிமையாகும்.
இதுபோக பெண்களுக்கு சுய செல்வமும் இருக்கத்தான் செய்யும். அதாவது வாரிசு முறையில் கிடைத்த சொத்து இருக்கலாம். அல்லது தகப்பனார் கொடுத்த அன்பளிப்புகள் இருக்கலாம். அல்லது கணவன் செலவுக்காகக் கொடுத்ததில் சிக்கனமாக செலவு செய்துவிட்டு சேகரித்து வைத்திருக்கலாம். இப்படி நகை நட்டுக்கள் என்று பெண்களுக்கு என தனி சொத்துக்களைச் சேர்த்து வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் மனைவிக்குரியதுதான்.
அதுபோக கணவனே அடிக்கடி அன்பளிப்பாக நகை நட்டுக்களை வாங்கிக் கொடுப்பான். இப்படி மனைவிக்குக் கணவன் கொடுத்தால் அது அவளுக்குரிய அன்பளிப்பாகத் தான் ஆகும். அவளுக்குத் தான் அது சொந்தம்.  கணவன் கொடுக்கும் போதே இது எனது சொத்து, நீ அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் உரிமை என்னுடையது என்று சொன்னால் அதில் மனைவிக்கு அனுபவிக்க மட்டும் தான் உரிமையுண்டே தவிர, அவற்றை தன்னுடைமை என உரிமை கொண்டாட முடியாது.