Sunday, June 05, 2011

நபிமொழிகளில் தடைசெய்யப்பட்டவை


தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது

414 عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْصَرَ نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا بِحَصَاةٍ ثُمَّ نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ أَوْ عَنْ يَمِينِهِ وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழ வேண்டாம். ஏனெனில் அவர் தொழுகையில் இருக்கும் வரை அவர் அல்லாஹ்விடமே அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அதே போல்) அவர் தம் வலப் புறமாக வும் உமிழ வேண்டாம். ஏனெனில், அவரது வலப் புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். (உமிழ வேண்டிய கட்டாயம் நேர்ந்தால்) தமது இடப் புறமோ அல்லது பாதத்திற்கு கீழேயோ உமிழ்ந்துவிட்டு அதை மண்ணுக்குள் புதைக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : புகாரி 416, 414, 409, 411, முஸ்லிம் 955

தொழுகையில் இரு தொடைகளின் இடுக்கில் கைகளை வைக்கக் கூடாது

790 قَالَ سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ يَقُولُ صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ رواه البخاري
நான் என் தந்தை (ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோர்த்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக்கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஅத்,
நூல்கள் : புகாரி 790, முஸ்-லிம் 931

அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது

6270 عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يُقَامَ الرَّجُلُ مِنْ مَجْلِسِهِ وَيَجْلِسَ فِيهِ آخَرُ وَلَكِنْ تَفَسَّحُوا وَتَوَسَّعُوا رواه البخاري
ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, "நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : புகாரி 6270, 6269, 911, முஸ்லி-ம் 4391

இடுப்பில் கைவைத்து தொழக்கூடாது

1220 حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا مُحَمَّدٌ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا رواه البخاري
ஒரு மனிதர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : புகாரி 1220, 1219, முஸ்லிம் 948

பட்டாடை அனைத்தும் ஆண்களுக்கு தடை

1239 عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ …وَنَهَانَا عَنْ آنِيَةِ الْفِضَّةِ وَخَاتَمِ الذَّهَبِ وَالْحَرِيرِ وَالدِّيبَاجِ وَالْقَسِّيِّ وَالْإِسْتَبْرَقِ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (ச்செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். . . . வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், (ஆண்கள்) தங்க மோதிரம் அணிவதி-ருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆஸிப் (ரலி),
நூல்கள் : புகாரி 1239, 5175, 5235, 5650 ,5863, முஸ்லிம் 4194

பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாது

1486 عن ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا وَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاحِهَا قَالَ حَتَّى تَذْهَبَ عَاهَتُهُ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் "பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது.' (அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : புகாரி 1486, 2184, 2194, முஸ்-லிம் 3078

தொடர் நோன்பிற்கு தடை

1922 عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاصَلَ فَوَاصَلَ النَّاسُ فَشَقَّ عَلَيْهِمْ فَنَهَاهُمْ قَالُوا إِنَّكَ تُوَاصِلُ قَالَ لَسْتُ كَهَيْئَتِكُمْ إِنِّي أَظَلُّ أُطْعَمُ وَأُسْقَى رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் (நோன்பு துறக்காமல்) தொடர்நோன்பு நோற்றார்கள்;
மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள், "நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களைப் போன்றவன் அல்லன்; (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : புகாரி 1922, 1962, முஸ்லி-ம் 2010

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது

1985 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ رواه البخاري
உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : புகாரி 1985, முஸ்லிம் 2102

மர்ம உறுப்பு வெளியில் தெரியுமாறு  ஆடை அணியக்கூடாது

5822 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ  رواه البخاري
ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடுவதையும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்)  போர்த்திக்கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்கா-ட்டு) அமர்வதையும் (இஹ்திபா) நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி
நூல்கள் : புகாரி (5822, 367, 368), முஸ்லிம் (4261)
தடைகள் வளரும் இன்ஷா அல்லாஹ்
(மே 2011 தீன்குலப்பெண்மணி)

நாஸ்,ஃபலக் விரிவுரை


நாஸ் மற்றும் ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை 

எழுத்து : முஹம்மது தாஹா கடையநல்லூர்

 

இந்த இரண்டு சூராக்களும் மக்காவில் அருளப்பட்டன என்று பெரும்பாலான குர்ஆன் மொழிபெயர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதா அல்லது மதீனாவில் அருளப்பட்டதா என்பதை சிந்தித்து கண்டுபிடிக்க முடியாது

மக்காவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் மதீனாவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் தகுந்த சரியான நபிமொழியைக் கொண்டு தான் நிரூபிக்க வேண்டும். அல்லது நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அதைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். அதுவும் ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்க வேண்டும்.
ஆனால் இன்று எல்லா மொழிபெயர்ப்புக்களிலுமே ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் மக்கீ என்றும் மதனீ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான அத்தியாயங்களுக்கு மக்கியாக இருப்பதற்கோ மதனியாக இருப்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் காணக் கிடைக்கவில்லை. குர்ஆனில் 95 சதவீத அத்தியாயங்களை மக்கீ என்றோ மதனீ என்றோ ஆதாரத்துடன் சொல்லவே முடியாது. மக்காவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான். மதினாவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று பொதுவாக நம்பினால் போதுமானது.
மேற்சொன்ன அடிப்படையில் பார்த்தால், சூரத்துந் நாஸும் சூரத்துல் ஃபலக்கும் மக்காவில் அருளப்பட்டது என்பதற்கோ மதீனாவில் அருளப்பட்டது என்பதற்கோ எந்தச் சான்றுமில்லை.
தமிழகத்தில் சில உலமாக்களால் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது. அதில் அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த இரண்டு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ வகையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார். ஆனால் புரசைவாக்கத்தில் இமாமாகப் பணிபுரிகிற நிஜாமுத்தீன் மன்பயீ என்பவரது மொழிபெயர்ப்பில் இந்த இரண்டு அத்தியாயங்களும் மதீனாவில் அருளப்பட்ட மதனீ வகையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார்.