FLASH NEWS....

السلام عليكم ورحمة الله وبركاته. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Sunday, April 15, 2012

சிறந்த தம்பதிகள்

சிறந்த தம்பதிகள்
யாசர் அரஃபாத், மங்களம்லிதிருப்பூர்


பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிரிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் அல்லது மனைவியிடத்தில் மார்க்கப்பற்று இல்லாததுதான். உதாரணமாக ஒரு கணவன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்தால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இறுதியில் பிரியும் நிலை ஏற்படுவதும் கணவனிடத்தில் மார்க்கப்பற்று இன்மையே காரணமாககும். அதேபோல் கணவன் என்னதான் சம்பாதித்து கொடுத்தாலும் பேராசை கொண்ட மனைவி அதைக் கொண்டு திருப்தி அடையாமல் இருந்தால் அங்கு பிணக்குகள் ஏற்படுகிறது. இதற்கும் காரணம், அந்த பெண்ணிடத்தில் மார்க்கப் பற்று இல்லாததுதான்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிணக்குகள் தவ்ஹீத் குடும்பங்களிலும் பெருகிய வருவதை நாம் காண்கிறோம். வரதட்சணை வாங்கும் அல்லது அனாச்சாரமான திருமணத்தில் கலந்து கொள்ளாதே என்று கணவன் சொன்னால் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் உறவுதான் முக்கியம் என்று சொல்லி பல பெண்கள் அந்த மார்கத்திற்கு முரணான திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்கும் அடிப்படை காரணம் மார்க்கப்பற்று குறைவாக உள்ளதுதான்.

அல்லாஹ்வின் பயம் இல்லாத கணவன், மனைவிகள், திருந்துவதற்க்கேற்ப தீன்குலத் தம்பதிகளை நபிமார்கள் மற்றும் சஹாபாக்களின் வாழ்க்கையில் காணமுடிகிறது. அந்த தீன்குலத் தம்பதிகள் போட்டி போட்டுக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள். நபிமார்களில் இப்ராஹீம் நபியின் குடும்பம் இதற்கு உதாரணமாகும். அதே போல சஹாபாக்களில் சிறந்த தம்பதியாக வாழ்ந்த பலதம்பதிகளில் ஒருவர் அபூ தல்ஹா (ரலி), உம்மு சுலைம் (ரலி). இந்த தம்பதிகள் எப்படியெல்லாம் சிறப்பான வாழ்கையை வாழ்ந்தார்கள் என்பதை காண்போம்.

பொறுப்புணர்வும் இறைபயமும்

பொறுப்புணர்வும் இறைபயமும்.

மனித சமுதாயம் அனைவருக்கும் ஏராளமான பொறுப்புகளை, கடமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யாரும் பொறுப்புகளிலிருந்து, கடமைகளிலிருந்து விலகி நிற்க முடியாது. 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட் பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாüயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாü யாவான்.

அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.  பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாü யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாüயாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 2554

Friday, March 30, 2012

சிங்கள மொழியிலும் சூடுபிடிக்கும் தாவாப்பணி

சிங்கள மொழியிலும் சூடுபிடிக்கும் தாவாப்பணி

இலங்கையில் புத்த மதத்தைப் பின்பற்றுவோர் சிங்கள் மொழி பேசுவோராகவும், இந்து, முஸ்லிம் கிறித்தவர்கள் தமிழ் மொழி பேசுவோராகவும் உள்ளனர். புத்த மதம் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான மதமாக இருப்பதாலும் சிங்கள மொழி பிரதான மொழியாகவும் உள்ளதால் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத தமிழர்களும் சிங்கள மொழியையும் படிக்கிறார்கள். ஆனால் சிங்கள மொழி பேசுவோர் பெரும்பாலும் தமிழ் மொழியைப் படிப்பதில்லை. எனவே சிங்கள் மக்கள் மத்தியில் சத்தியப் பிரச்சாரம் சென்றடைய வேண்டுமானால் சிங்கள் மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டால் தான் சாத்தியமாகும்.

இதில் தமிழ் கூறும் முஸ்லிம் அமைப்புகள் போதுமான அளவுக்கு அக்கறை செலுத்தாமல் இருந்த குறையை இலங்கையில் SLTJ (ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கைப் பிரிவு) ஓரளவுக்கு நிவர்த்தி செய்து வருகின்றது.
இது வரை 17 நூல்களை சிங்கள் மொழியில் SLTJ வெளியிட்டுள்ளது. SLTJ யின் இலங்கை பொதுச் செயலாளர் அப்துர்ராஸிக் அவர்கள் இந்த நூல்களை சிங்கள் மொழியில் மொழிபெயர்த்து இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வெளியிடப்பட்ட்து.
பீஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கமும் சிங்கள மொழியில் மாற்றம் செய்யும் பணிகளும் முடியும் தறுவாயில் உள்ளது.
இதன் மூலம் சிங்கள மக்கள் இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு இஸ்லாத்தில் ஈர்க்கப்பட்டும் வருகின்றன. அல்ஹம்து லில்லாஹ்
சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட நூல்களில் சில

.இயேசு இறைமகனா


புத்தகம் கிடைக்குமிடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தக நிலையம் இல 241யு, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை மாளிகாவத்தை கொழும்பு -10.
தொடர்புகளுக்கு 0112677974 0774781472