Monday, October 10, 2011

கிருத்துவர்களை மூச்சுத் திணற வைத்த விவாதம்:

கும்பகோணத்தில் சில பாதிரியார்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் சில மாதங்களுக்கு முன்பு விவாதம் நடந்தது நமக்கு நினைவிருக்கலாம். அந்த விவாதத்தில் பங்குகொண்ட நம் மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கினார் அந்தப் பாதிரியார்கள். வழக்கம் போல வல்ல இறைவன் அந்த விவாதத்திலும் நமக்கு வெற்றியையே தந்தான்.

அந்த விவாதங்கள் சீடியாக வெளியிடப்பட்டு மக்கள் கிருத்துவத்தின் பொய்மையை அறிந்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த விவாதத்தின் விவரங்கள் உணர்வு வார இதழிலும் தொடராக வெளிவந்து பரபரப்பை உண்டாக்கியது. இந்தத் தொடரை நிறுத்தி விடுங்கள் என்றெல்லாம் சில பாதிரியார்கள் நம் சகோதரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் இந்த சீடியை முழுமையாகப் பார்த்த சில பாதிரியார்கள் நம் தலைமையகத்திற்குக் கடிதம் எழுதினார்கள்.
நீங்கள் வாயில்லாப் பிள்ளைப்பூச்சிகளிடம் விவாதம் செய்து விட்டு அதைப் பெருமையாக பீற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் அவர்கள் மவுனம் சாதித்த கேள்விகளுக்கு நாங்கள் அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் காத்திருக்கிறோம். 5 மற்றும் 6 ஆம் தேதி ஆகிய இரு நாட்களும் நாங்கள் விவாதிக்கத் தயார் என்றும் கடிதம் அனுப்பியிருந்தனர். அவர்களின் அழைப்பை அன்போடு ஏற்றுக் கொண்டு 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் விவாதம் நடத்த வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது விவாதம் இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் கிறித்தவர்களின் வேதம் குறித்து முஸ்லிம்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு கிறித்தவர்கள் பதிலளிக்க வேண்டும். இது இரண்டு நாட்கள் நடத்தப்பட வேண்டும்.அதன் பின்னர் முஸ்லிம்களின் வேதம் குறித்து கிறித்தவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கலாம். அதற்கு முஸ்லிம்கள் பதிலளிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்ட்து.
முதல் தலைப்பிலான விவாதம் இம்மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் நடத்துவது என்றும் ஆறாம் தேதி விவாத முடிவில் இரண்டாம் தலைப்புக்கான தேதியை முடிவு செய்வது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விவாத அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இரு புறமும் தலா இருபது பேர் கலந்து கொள்ளும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. சகோ.ஜெபக்குமார் தலைமையில் சகோ. சுதன்பாண்டியன், சகோ.மதிவானன், சகோ.பன்னீர்செல்வம், சகோ.சுரேஷ் ஆகியோர் ஒரு குழுவாகவும், சகோ. கலீல் ரசூல் தலைமையில், சகோ. கோவை சகோ.ரஹ்மத்துல்லாஹ்,சகோ. சையது இப்ராஹீம்,சகோ.யூசுஃப்,சகோ. தாங்கல் ஹபிபுல்லா,சகோ. E. பாரூக் மற்றும் பலரும் கலந்து கொள்ள விவாதம் துவங்கியது.
விவாதத்தின் முதல் அமர்வில் பைபிளில் மனிதச் சரக்குகள் கலந்துள்ளது என்றும், பைபிள்  7 முறை புடம்போடப்பட்டும் இன்னும் தவறுகள் இருக்கின்றன என்றும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும், அத்தோடு நாங்களும் நூற்றுக்கும் அதிகமான வசனங்களை நீக்கி விட்டோம் என்றும் போட்டு உடைத்தனர் கிருத்தவ விவாதக் குழுவினர். ஆரம்பமே அமர்க்களமாக துவங்கியதும் நம் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மூச்சுத் தினறினார்கள் பாதிரிமார்கள்.
பைபிளில் இருந்து இன்னும் கூட வசனங்கள் நீக்கப்படும் என பகிரங்கமாக  ஒப்புக் கொண்டனர் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். இப்படியாக போய்க் கொண்டிருந்த விவாதத்தில் சில வசனங்களுக்கு விளக்கம் கேட்க, அவர்கள் கொடுத்த சமாளிப்பு அனைவரையும் நகைப்புக்குள்ளாக்கியது. இறுதியில் பைபிளில் உள்ள ஆபாசங்களை நம் சகோதரர்கள் அள்ளிக் கொட்டிய போது அவர்களிடம் இருந்து பதில் என்ற பெயரில் வந்த விளக்கங்கள் பார்ப்பவர்களை திகைக்க வைத்தது.
பைபிள் வசனங்களைப் படித்துக் கொண்டிருந்த பெண்களை ஒரு கட்டத்தில் பைபிளில் உள்ள உன்னதப்பாட்டுஅதிகாரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட போது அவர்கள் திக்கித் திணறி தலை குணிந்ததைப் பார்க்க முடிந்தது. ஆபாசங்கள் நிறைந்த அத்தியாயங்களைப் படிக்கப் படிக்க அவர்கள் சார்பில் வந்திருந்த பெண்கள் நெளிய ஆரம்பித்தனர்.
பெண்களின் முன்னிலையில் படிக்க முடியாத இந்தப் புத்தகத்தை நீங்கள் எப்படி இறைவேதமாக நம்புகிறீர்கள் என்று நம் விவாதக் குழுவினர் கேட்ட போது அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சம்பந்தமே இல்லாதவற்றைப் பேசி காலத்தைக் கடத்தினர் கிருத்துவர்கள்.
நேரம் ஆக ஆக பதில் சொல்லமுடியாமல் இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இப்படி விவாதம் போய்கொண்டிருன்ந்த போது ஒரு கட்டத்தில் இரண்டு நாட்கள் விவாதக்க ஒப்புக் கொண்டு வந்த கிறித்தவர்கள் ஒரு நாளிலேயே விவாத்ததை முடித்துக் கொள்வோம். அப்படித்தான் நாம் முடிவு செய்தோம் என்று பல்டி அடித்தனர்.
காலையில் விவாதம் துவங்கிய போது அவர்கள் சொன்ன ஒரு தகவலுக்கு நம் தரப்பில் ஆதாரம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நாளை விவாத்ததுக்கு வரும் போது கொண்டு வருகிறோம் என்று பதில் அளித்தனர். இது விவாத சீடியில் பதிவாகியுள்ளது. இதில் இருந்து அவர்கள் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு தான் வந்தனர் என்பதை நீங்கள் அறியலாம். முதல் நாள் இறுதியில் பேசும் போது ஒரு நாள் விவாதம் என்று தான் பேசப்பட்டது என்றனர். மேலும் அடுத்த தலைப்புக்கான தேதி குறித்து பேசவும் அவர்கள் விரும்பவில்லை.
முதன் முதலில் கிறித்தவர்களின் பெந்த கொஸ்தே குரூப்பைச் சேர்ந்த ஜெபமணி என்பவருடன் நாம் விவாதம் நடத்தினோம்.கும்பகோனத்தில் ஆர்சி எனப்படும் கத்தோலிக்க பிரிவினருடன் விவாதம் நடத்தினோம்.ஜெரி தாமஸ் வகையறாக்கள் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் இவர்கள் அனைவரையும் விட பைபிள் அறிவாளிகளாகவும் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்களாகவும் தங்களை கூறிக் கொள்ளும் யஹோவா விட்னஸ் என்ற பிரிவினருடன் யாரும் விவாதிக்க முடியாது. அவர்கள் பைபிளைக் கரைத்து குடித்தவர்கள் என்ற கருத்து கிறித்தவ மக்களிடம் உள்ளது. இப்போது நாம் நடத்திய விவாதம் இந்த யஹோவா பிரிவினருடன் தான் .
இதன் மூலம் கிறித்தவர்களின் அனைத்து பிரிவினருடனும் தவ்ஹீத் ஜமாஅத் விவாதக் களம் கண்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். நடந்து முடிந்த மூன்றிலும் அல்லாஹ் மாபெரும் வெற்றியை அளித்தான். இனி நடக்கவுள்ள விவாதங்களிலும் அல்லாஹ் வெற்றியை அளிப்பான். இன்ஷா அல்லாஹ்
இந்த விவாதத்திற்கான முடிவுகளும் மக்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்படுகின்றது. மனிதச் சரக்குகள் சங்கமித்திருக்கும் பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் இறைவேதமாக நம்பும் மக்களை நோக்கி இறுதி ஏற்பாட்டு வேதக்காரர்கள் வைத்த ஒவ்வொறு வாதங்களும் அவர்களை மூச்சு தினறவைத்த காட்சிகளை கீழ்க்கண்ட வீடியோக்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.


பாகம்:1


பாகம்:2

பாகம்:3
 
 பாகம்:4



பாகம்:6





பாகம்:7
பாகம்:5

No comments:

Post a Comment