Sunday, November 13, 2011

இன்ன அன்ன ஏன் பொருள் செய்யவில்லை?


இன்ன அன்ன ஏன் பொருள் செய்யவில்லை?


எனது தமிழாக்கத்தில் இன்ன அன்ன என்ற சொற்களுக்கு மற்றவர்கள் செய்தது போல் நிச்சயமாக என்று ஏன் மொழி பெயர்ப்புச் செய்யாமல் விட்டுள்ளீர்கள் என்ற கேள்வி பரவலாக்க் கேட்கப்பட்டு வருகிறது.

இந்தக் கேள்வி வருவதற்கு முன்பே இதற்கு நான் எனது தமிழாக்கத்தின் முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

அதைக் கீழே தருகிறேன்.

அரபு மொழியில் ஒரு கருத்தை வலியுறுத்தி சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெரிவிப்பதற்காக "இன்ன' அல்லது "அன்ன' என்ற இடைச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். இது போன்ற வழக்கு தமிழில் இல்லை. "நிச்சயமாக' என்று சிலர் இதற்குத் தமிழாக்கம் செய்துள்ளனர். இது தவறாகும்.

இன்ன, அன்ன என்பது இடைச் சொல்லாகும். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லாகத் தான் பொருள் செய்ய வேண்டும். இடைச் சொல் என்றால் அதைத் தனியாகக் கூறினால் அர்த்தம் இருக்காது. இன்னொரு சொல்லுடன் சேர்த்தால் தான் அர்த்தம் தரும்.

உதாரணமாக "ஃபீ' என்ற அரபு மொழி இடைச் சொல்லை எடுத்துக் கொள்வோம். இதற்குத் தனியாக அர்த்தம் இல்லை. "ஃபீ' என்பது "மக்கா' என்ற சொல்லுடன் சேர்ந்து "ஃபீ மக்கா' என்று வரும் போது "மக்காவில்' அல்லது "மக்காவிலே' என்று பொருள் செய்கிறோம். "லே' என்று மட்டும் சொன்னால் அதற்கு அர்த்தம் இல்லை. இது போல் தான் "இன்ன', "அன்ன' என்பதும்.

"ஃபீ' என்ற இடைச்சொல்லுக்கு தமிழ் மொழியில் "லே' என்ற இடைச்சொல் இருக்கிறது. அதனால் அதனால் இந்த இடைச்சொல்லுக்குத் தமிழாக்கம் செய்வதில் பிரச்சனை இல்லை.

ஆனால் "இன்ன' "அன்ன' என்ற இடைச் சொல்லுக்கு நிகரான மற்றொரு இடைச் சொல் தமிழ் மொழியில் இல்லை. அவ்வாறு இருந்தால் தான் அதற்குப் பொருள் செய்ய முடியும். அத்தகைய இடைச் சொல் தமிழில் இல்லாததால் மற்றவர்கள் செய்தது போன்று "நிச்சயமாக' என்று பொருள் செய்வதைத் தவிர்த்து விட்டோம்.

இப்படி நாம் விளக்கமாக சொன்ன பிறகும் மேலதிகமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதற்காகக் கூடுதல் விளக்கத்தைத் தரும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரபு மொழியில் ஒன்றை உறுதிப்படுத்திக் கூறுவதற்காக இன்ன அன்ன ஆகிய சொற்கள் உள்ளன எனபது உண்மை தான். இவை மட்டுமின்றி இதே கருத்தைத் தருவதற்காக இன்னும் பல சொற்களும் உள்ளன. இன்ன, அன்ன என்ற சொல் எப்படி உறுதிப்படுத்திக் கூறுவதற்காக உள்ளனவோ அதே பொருளைத் தான் அந்தச் சொற்களும் தரும். இது போன்ற சொற்கள் தஃகீத் சொற்கள் என்று சொல்லப்படுகிறது.

இன்ன அன்ன என்ற சொல்லுக்கு நிச்சயமாக என்று தமிழில் சொல்லியே ஆக வேண்டும் என்று வாதிடக் கூடியவர்கள் இது போல் அமைந்த எல்லா சொற்களுக்கும் அப்படி பொருள் செய்ய மாட்டார்கள். அதைக் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.

இதற்குச் சில உதாரணங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

قَالَ فَاذْهَبْ فَإِنَّ لَكَ فِي الْحَيَاةِ أَنْ تَقُولَ لَا مِسَاسَ وَإِنَّ لَكَ مَوْعِدًا لَنْ تُخْلَفَهُ وَانظُرْ إِلَى إِلَهِكَ الَّذِي ظَلَلْتَ عَلَيْهِ عَاكِفًا لَنُحَرِّقَنَّهُ ثُمَّ لَنَنسِفَنَّهُ فِي الْيَمِّ نَسْفًا(97)20

இவ்வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம்

97. "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் "தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக் கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.19

நமது தமிழாக்கத்தை எதிர்த்து இக்கேள்வியைக் கேட்பவர்கள் செய்ய வேண்டிய தமிழாக்கம் இப்படித்தான் வரவேண்டும்.

97. "நீ சென்று விடு! நிச்சயமாக உனது வாழ்க்கையில் "தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். நிச்சயமாக மாற்றப்பட முடியாத வாக்களிக் கப்பட்ட நேரமும் நிச்சயமாக உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நிச்சயமாக நெருப்பில் நிச்சயமாக எரித்து பின்னர் நிச்சயமாக அதைக் கடலில் நிச்சயமாக தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.19

மேற்கண்ட 20 வது அத்தியாயம் 97 வது வசனத்தில் ஏழு இடங்களில் நிச்சயமாக என்ற கருத்தைத் தரும் சொற்கள் உள்ளன. யாருடைய மொழி பெயர்ப்பிலாவது ஏழு தடவை நிச்சயமாக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

ஏழு இடங்களில் அவர்கள் நிச்சயமாக என்று குறிப்பிடவில்லையானால் அவர்களும் தஃகீத் எனும வகையைச் சேர்ந்த சொல்லுக்கு பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.

அது போல் பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

إِنَّ الَّذِينَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمْ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ(155)3

மேற்கண்ட 3:155 வசனத்துக்கு நாம் செய்த தமிழாக்கம் இது தான்

155. இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழி தவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.

தஃகீத் சொற்களுக்கு நிச்சயமாக என்ற சொல்லை சேர்க்க வேண்டும் என்று வாதிடுவோர் இதற்கு ஐந்து இடங்களில் நிச்சயமாக என்று சேர்க்க வேண்டும்.

155. இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் நிச்சயமாக பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக நிச்சயமாக ஷைத்தான் வழி தவறச் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் நிச்சயமாக அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.

இப்படி ஐந்து இடங்களில் நிச்சயமாக என்ற சொல்லைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களும் தஃகீத் சொற்களுக்கு பொருள் செய்யாமல் விட்டுள்ளனர் என்பதே பொருளாகும்.

இது போல் மேலும் சில வசனங்களைச் சுட்டிக் காட்டியுள்ளேன். அவற்றுக்கு எத்தனை தடவை நிச்ச்யமாக என்று குறிப்பிட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன். அனைத்து தமிழாக்கங்களிலும் இது போல் பொருள் செய்யப்பட்டுள்ளதா என்று தேடிப்பாருங்கள்.

2:130 வசனத்தில்

وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدْ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنْ الصَّالِحِينَ (130)2

நான்கு தடவை நிச்சயமாக என்ற சொல் வர வேண்டும்.

5:12 வசனத்தில்

وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمْ اثْنَيْ عَشَرَ نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمْ الصَّلَاةَ وَآتَيْتُمْ الزَّكَاةَ وَآمَنْتُمْ بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمْ اللَّهَ قَرْضًا حَسَنًا لَأُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ فَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ(12)5

ஒன்பது தடவை நிச்சயமாக என்று குறிப்பிட வேண்டும்.

12:41 வசனத்தில்

قَالُوا تَاللَّهِ لَقَدْ آثَرَكَ اللَّهُ عَلَيْنَا وَإِنْ كُنَّا لَخَاطِئِينَ(91)12

நான்கு தடவை தஃகீத் சொற்கள் உள்ளன. நான்கு தடவை நிச்சயமாக என்று குறிப்பிட வேண்டும்.

மேலும் கீழ்க்கண்ட வசனங்களில் எத்தனை தடவை நிச்சயமாக என்று வர வேண்டும்? எத்தனை தடவை வந்துள்ளன என்று சிவப்பு அடையாளத்தை வைத்து அறிந்து கொள்ளுங்கள்

• مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ(32)5

• وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ(110)11

• قَالَتْ فَذَلِكُنَّ الَّذِي لُمْتُنَّنِي فِيهِ وَلَقَدْ رَاوَدتُّهُ عَنْ نَفْسِهِ فَاسْتَعْصَمَ وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونَ مِنَ الصَّاغِرِينَ(32)12

• وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ(24)15

• وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ(97)15

• وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ(103)16

• وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَلَّنْ نَجْعَلَ لَكُمْ مَوْعِدًا(48)15

• وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ(3)29

• وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ وَلَئِنْ جِئْتَهُمْ بِآيَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ أَنْتُمْ إِلَّا مُبْطِلُونَ(58)30

• وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(65)39

• قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ(70)2

• ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنْ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ(74)2

• إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ وَإِنْ كُنَّا لَمُبْتَلِينَ(30)23

• وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ(109)6

• وَلَمَّا وَقَعَ عَلَيْهِمْ الرِّجْزُ قَالُوا يَامُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ لَئِنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ(134)7

• وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ(10)11

• وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ(7)14

• وَلَئِنْ مَسَّتْهُمْ نَفْحَةٌ مِنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَاوَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ(46)21

• وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنْ الْخَاسِرِينَ(65)39

• وَلَئِنْ أَذَقْنَاهُ رَحْمَةً مِنَّا مِنْ بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَذَا لِي وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُجِعْتُ إِلَى رَبِّي إِنَّ لِي عِنْدَهُ لَلْحُسْنَى فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ(50) 41

உதாரணத்துக்குத் தான் சில வசனங்களைப் பட்டியல் போட்டுள்ளோம். தஃகீத் எனும் உறுதிப்படுத்தும் வகையில் ஏராளமான சொற்கள் அரபு மொழியில் உள்ளன. இவை அனைத்துமே உறுதிப்படுத்துவதில் சமமான தகுதியில் உள்ளவை தான்.

இன்ன என்பதற்கும் அன்ன என்பதற்கும் நிச்சயமாக என்று மொழி பெயர்க்க வேண்டும் என்று கூறுவதற்கு என்ன காரணமோ அதே காரணம் மற்ற அனைத்து தஃகீத் சொற்களுக்கும் உள்ளன. ஆனால் இன்ன அன்ன என்பதற்கு மட்டும் நிச்சயமாக என்று பொருள் செய்ய வேண்டும் என்று வாதிடுவோர் மற்ற தஃகீத் சொற்களுக்கு அவ்வாறு பயன்படுத்துவது இல்லை.

இதற்கான காரணம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதாவது எந்த மொழியாக இருந்தாலும் பெயர்ச்சொற்களுக்கும் விணைச் சொற்களுக்கும் தான் மொழி பெயர்க்க முடியும். இடைச் சொற்களைப் பொருத்தவரை ஒரு மொழியில் உள்ள இடைச் சொற்களுக்கு நிகரான இடைச் சொல் மற்ற மொழியிலும் இருந்தால் தான் மொழி பெயர்க்க இயலும். தஃகீத் என்ற வகைச் சொற்களுக்கு நிகரான இடைச் சொல் தமிழ் மொழியில் இல்லாததால் அது அரபு மொழியின் சிறப்பு நடை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் காரணமாகவே ஏராளமான தஃகீத் சொற்களுக்கு மொழி பெயர்க்காமல் எல்லா அறிஞர்களும் தங்கள் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் விட்டு விடுகின்றனர். ஆனால் இன்ன என்பதற்கு மட்டும் காரணம் இல்லாமல் வித்தியாசமான நடைமுறையைக் கையாண்டு வருகின்றனர். அதைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என் மீது பழி போடுகின்றனர்.

இன்ன அன்ன என்பதற்கு பீஜே மொழி பெயர்க்கவில்லை என்று குற்றம் சாட்டும் ஒருவர் தனது பல்வேறு உரைகளின் போது இன்ன என்பதை வாசிப்பதையும் அதற்கு நிச்சயமாக என்று பொருள் செய்யாமல் விட்டு ஓடுவதையும் பாருங்கள்



பீஜே மொழிபெயர்க்கவில்லை என்று குற்றம் சாட்டும் காட்சி:

http://onlinepj.com/VIVATHAM%20VIDEO/download.php?file=inna_anna_pj_mozipeyarkavillai.wmv

குற்றம் சாட்டியவரே அதை விட்டு விடும் காட்சி:
http://onlinepj.com/VIVATHAM%20VIDEO/download.php?file=inna_anna_mozipeyrakatha_mujeeb.wmv

Thanks: onlinepj.com



No comments:

Post a Comment