Monday, June 04, 2012

விரல் அசைத்தல் மறுப்புக்கு மறுப்பு -02

இஷாரா என்பதின் பொருள்
இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்.
அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது. அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.
ஒருவரை எச்சரிக்கும் போது ஆட்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.
சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டி விரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவு இல்லாத இஷாரா ஆகும்.
எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவாகவில்லை. ஸாயிதா இதைத் தெளிவுபடுத்துகிறார்; முரண்படவில்லை.
மனிதன் வந்தான் என்று இவ்விருவரும் கூறுகிறார்கள்; உயரமான மனிதன் வந்தான் என்று ஸாயிதா கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால் இரண்டும் முரண் என்று யாருமே கூற மாட்டோம்.
மனிதன் என்பதில் உயரமானவரும் இருக்கலாம்; உயரம் குறைந்தவரும் இருக்கலாம். அதை மற்ற இருவர் தெளிவுபடுத்தவில்லை. உயரமான மனிதர் என்று ஒருவர் தெளிவாகக் கூறி விட்டார் என்று புரிந்து கொள்வதைப் போல் இதையும் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை ஷாத் என்று கூற மாட்டார்கள்.
இஷாரா என்பது அசைத்தல் என்பதற்கு முரணானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் பின்வரும் ஹதீஸை சான்றாகக் கொள்ளலாம்.
  باب إشارة الخاطب بالسبابة على المنبر عند الدعاء في الخطبة وتحريكه إياها عند الإشارة بها أنا أبو طاهر نا أبو بكر نا بشر بن معاذ العقدي نا بشر بن المفضل نا عبد الرحمن بن إسحاق عن عبد الرحمن بن معاوية عن بن أبي ذباب عن سهل بن سعد قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم شاهرا يديه قط يدعو على منبره ولا على غيره ولكن رأيته يقول هكذا وأشار بأصبعه السبابة يحركها قال أبو بكر عبد الرحمن بن معاوية هذا أبو الحويرث مدني - صحيح ابن خزيمة ج: 2 ص: 351
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரிலோ மற்ற இடங்களிலோ கைகளை உயர்த்தி துஆ செய்ததை நான் கண்டதில்லை. மாறாக தமது ஆட்காட்டி விரலால் இஷாரா செய்து அசைப்பார்கள் என்று ஸஹ்ல் பின் சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் இப்னு குஸைமா
இந்த ஹதீஸ் அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது பற்றிக் கூறும் ஹதீஸ் அல்ல. இஷாரா என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்
ஆட்காட்டி விரலை இஷாரா செய்து அசைப்பார்கள் என்று இதில் கூறப்படுகிறது. முரண்பட்ட இரு சொற்களை இணைத்துப் பேச முடியாது. இஷாரா என்பதும் அசைத்தல் என்பதும் நேர் முரண் என்றால் இஷாரா செய்து அசைப்பார்கள் என்று கூற முடியாது.
எனவே ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்பதும் இஷாரா செய்தார்கள் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
செத்து சாகவில்லை என்று கூற முடியாது. சாப்பிட்டு சாப்பிடவில்லை என்று கூற முடியாது. சூடான குளிர் நீர் என்று சொல்ல முடியாது. ஆனால் அசைத்து இஷாரா செய்தார்கள் என்று கூற முடியும்.
ஒன்றுக்கொன்று முரணா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இரண்டையும் இணைத்துப் பேச முடியுமா என்று பார்க்க வேண்டும். இணைத்து பேச முடிந்தால் அது ஒன்றுகொன்று முரண் அல்ல. இரண்டையும் இணைத்துப் பேச முடியாவிட்டால் அது ஒன்றுக்கொன்று முரண் என்று பொருள்.
பலர் அறிவிப்பதற்கு முரணாக ஒருவர் அறிவித்தால் அது ஷாத் என்று விளங்கி வைத்திருப்பவர்களுக்கு முரண் என்றால் என்ன என்பது விளங்கவில்லை. இது தான் குழப்பத்துக்குக் காரணம். 
எனவே இந்த நுணுக்கத்தை இவர்கள் அறியாததால் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர். ஒருவர் அறிவிப்பதை விட மேலதிகமாக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை? ஒருவர் அறிவிப்பதற்கு எதிராக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை?
مقدمة فتح البارى - (ج 2 / ص 257)
وأما المخالفة وينشأ عنها الشذوذ والنكارة فإذا روى الضابط والصدوق شيئا فرواه من هو أحفظ منه أو أكثر عددا بخلاف ما روى بحيث يتعذر الجمع على قواعد المحدثين فهذا شاذ وقد تشتد المخالفة أو يضعف الحفظ فيحكم على ما يخالف فيه بكونه منكرا
பலர் அறிவிப்பதற்கு முரணாக ஒருவர் அறிவிக்கும் போது ஷாத் என்ற நிலை ஏற்படும். நம்பகமானவர் அல்லது உண்மையாளர் ஒன்றை அறிவிக்க, அவரை விட உறுதியானவரோ, அல்லது அவரை விட அதிக எண்ணிக்கை உடையவர்களோ இரண்டையும் இணைக்க முடியாத அளவுக்கு முரண்பட்டு அறிவித்தால் அது தான் ஷாத் ஆகும்.
ஃபத்ஹுல் பாரி முன்னுரையில் இப்னு ஹஜர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.  எனவே அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் எந்த வகையிலும் பலவீனமாக்க முடியாத, வலுவான ஹதீஸ் என்பதே இதன் மூலம் உறுதியாகின்றது.
இவர்களின் வாதப்படி ஷாத் என்று கூறுவதாக இருந்தால் தொழுகையில் விரலை அசைக்கக்கூடாது என்பதற்கு இவர்கள் ஆதாரமாக்க் காட்டும் பின்வரும் ஹதீஸை தான் ஷாத் என்று கூற வேண்டும்.
இமாம் பைஹகீ அவர்களுடைய கூற்றின் நிலை என்ன?
இமாம் பைஹகீ அவர்கள் நாம் ஆதாரமாக்க் காட்டும் நபிமொழிக்கு சற்றும் பொருந்தாத வேறு ஒரு அர்தத்தைக் கொடுக்கின்றார்.
ஹதீஸில் கூறப்படும் அசைத்தல் என்பதன் கருத்து இஷாரா செய்வது தான். தொடர்ந்து அசைத்துக் கொண்டிருப்பது அல்ல என இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸிற்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இமாம் பைஹகீ அவர்கள் ஆஸிம் பின் குலைப் இடம்பெற்றுள்ள விரலசைப்பது தொடர்பான ஹதீஸ் வலுக் குறைந்தது எனவும் முஹம்மது பின் அஜ்லான் இடம்பெற்றுள்ள விரலசைக்கக் கூடாது என்ற கருத்தில் உள்ள ஹதீஸ் அதை விடவும் வலிமையானது என்றும் கூறியுள்ளார்.
விரலசைப்பது பித்அத் என்று கூறுபவர்கள் தங்கள் கூற்றுக்கு இமாம் பைஹகீ அவர்களின் கூற்றை மிகப்பெரிய சான்றாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இமாம்களின் கருத்துக்களைப் பொறுத்தவரை அதை அப்படியே கண் மூடிக்கொண்டு ஏற்க இயலாது. அதில் ஏற்கத் தகுந்த விசயங்களும் ஏற்க முடியாத விசயங்களும் இருக்கும். ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த சரியான விளக்கத்தை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்வோம்.
நாம் மட்டுமல்ல பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த நிலைபாட்டையே கொண்டிருக்கின்றார்கள். இமாம் பைஹகீ அவர்களின் கூற்று தவறானது என்பதை தக்க சான்றுகளுடன் நாம் முன்பு விளக்கி இருக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் தொடர்ந்து விரலசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற கருத்து அந்த ஹதீஸில் தெளிவாக உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால் முஹம்மது பின் அஜ்லானுடைய அறிவிப்பு பலவீனமானது என்பதும் ஆஸிம் பின் குலைபுடைய அறிவிப்பு பலமானது என்பதும் தெளிவாகின்றது.
உண்மை தெளிவான பிறகு இதற்கு மாற்றமாக இமாம் பைஹகீ கூறினால் அதை எப்படி ஏற்க முடியும்?
இமாம்களின் சுய விளக்கங்களை ஆதாரமாக்க் காட்டும் இவர்கள் தங்களுக்கு எதிராக இமாம்கள் எதையாவது கூறியிருந்தால் அப்போது அதைக் கண்டுகொள்வதே இல்லை. இது தான் இவர்கள் இமாம்களை மதிக்கும் லட்சணம்?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸ் சரியானது என்று இமாம் நவவீ கூறியுள்ளார். ஏன் இவர்கள் ஆதாரமாக்க் காட்டும் இமாம் பைஹகீ அவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறவில்லை. சரியானது என்றே கூறுகிறார்.
ஆனால் இவர்களோ இந்த இமாம்களுக்கு மாற்றமாக இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதம் வைக்கின்றனர்.
வாயில் பின் ஹுஜர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு இமாம் மாலிக் அவர்களும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த சில அறிஞர்களும் இருப்பில் தொடர்ந்து விரலை அசைப்பது விரும்பத் தகுந்த செயல் என்று கூறியுள்ளார்கள். அபூ ஹாமித் பன்தனீஜீ, அபுத் தைய்யுப் மற்றும் பலர் இவ்வாறு கூறுவதாக இமாம் நவவீ அவர்கள் ஷரகுல் முஹத்தப் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
جامع الأصول (5 / 404):
 وقد استدل آخرون بحديث وائل على استحباب تكرير الأصبع، كمالك وغيره، وقال به بعض الشافعية، كما في " شرح المهذب " للنووي 3 / 454.
المجموع شرح المهذب (3 / 454):
 (وَالثَّالِث) يُسْتَحَبُّ تَحْرِيكُهَا حَكَاهُ الشَّيْخُ أَبُو حَامِدٍ وَالْبَنْدَنِيجِيّ وَالْقَاضِي أَبُو الطَّيِّبِ وَآخَرُونَ وَقَدْ يُحْتَجُّ لِهَذَا بِحَدِيثِ وَائِلِ بْنِ حُجُرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ وَصَفَ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
இமாம்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவதாக இருந்தால் விரலசைத்தல் பிரச்சனையில் இவர்களுக்கு எதிராக நிறைய இமாம்களின் கருத்துக்களை நம்மால் காட்ட முடியும்.
குழப்பமான விளக்கம்
விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை வெறுப்பவர்கள் இதை ஓரங்கட்டுவதற்கு பல வகைகளில் முயற்சி செய்கிறார்கள். 
இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று தெளிவான வாசகம் இடம் பெற்றுள்ளது. இருப்பில் விரலசைப்பதற்கு இவ்வளவு தெளிவாக வாசகம் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இவர்கள் இந்தச் செய்திக்கு சற்றும் பொருந்தாத விசித்திரமான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். தங்கள் கருத்துக்குத் ஏற்ப இந்தச் செய்தியை அநியாயமாக வளைக்கின்றார்கள்.
அசைத்தார்கள் என்றால் விரலை உயர்த்தினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் விரலை உயர்த்தும் போது விரல் அசையும் நிலை ஏற்படும். குறிப்பாக ஹனஃபீ மத்ஹபின் கருத்துப்படி விரலை உயர்த்தி கீழே விட்டு விட வேண்டும். இப்போது விரலாட்டுதல் தெளிவாக நடக்கின்றது.  இந்த அசைவைப் பற்றித் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் கூறுவது போன்று ஹதீஸில் அசைத்தார்கள் என்ற வாசகம் இடம்பெறவில்லை. மாறாக அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது.
யுஹர்ரிகுஹா என்ற அரபுச் சொல்லுக்கு அரபு மொழிப்படி அசைத்தார்கள் என்று பொருள் செய்வது தவறாகும். இந்தச் சொல்லுக்கு அசைப்பார்கள் என்ற அர்த்தமும் அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற அர்த்தமும் மட்டுமே உள்ளது.
இந்தச் செய்தி நடந்து முடிந்த சம்பவத்தைப் பற்றி பேசுவதால் அசைப்பார்கள் என்ற வருங்கால அர்த்தத்தை இங்கே கொடுக்க முடியாது. அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இன்னொரு அர்தத்தை மட்டுமே இங்கே கொடுக்க முடியும்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இருப்பு முழுவதிலும் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் எனும்போது இதற்கு விரலை நீட்டினார்கள் என்றும் நீட்டிவிட்டு மடக்கினார்கள் என்றும் பொருள் செய்வது மடமையாகும்.
விரலசைப்பது பற்றிய நபிமொழியைப் படித்தால் அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவர்களின் இந்த கற்பனை விளக்கத்தை தகர்த்து எரியக்கூடிய வகையில் இருக்கின்றது.
ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي
வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலை உயர்த்தினார்கள். அழைப்பது போல் (அல்லது பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில்) அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நஸாயீ (870)
விரலை நீட்டும் போது உள்ள அசைவைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. விரலை நீட்டிய பிறகு அதை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றே இந்த ஹதீஸ் கூறுகின்றது.
ஆட்காட்டி விரலை உயர்த்தினார்கள். அதை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகம் இதைத் தெளிவாக கூறுகின்றது.
முதலில் விரலை உயர்த்த வேண்டும். பிறகு அதை அசைக்க வேண்டும் என்று வெவ்வேறான இரண்டு செயல்கள்  ஒன்றன் பின் ஒன்றாக கூறப்பட்டிருக்கும் போது உயர்த்துவதும் அசைப்பதும் ஒன்று தான் எனக் கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.
உதாரணமாக ஒருவர் கொடியை உயர்த்தி பிறகு அசைத்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் கொடி அசைக்கப்படவில்லை என்று யாராவது விளங்கினால் அவர் அறிவில்லாதவராகத் தான் இருக்க முடியும்.
அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு உயர்த்தினார்கள் என்று பொருள் செய்பவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
கீழிருக்கும் விரலை மேல் நோக்கி உயர்த்தினால் விரல் ஆடாமல் இருக்காது அந்த அசைவைப் பற்றித் தான் இந்த ஹதீஸ் பேசுகின்றது எனவும் சிலர் கூறுகின்றனர்.
இதுவும் இவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது. விரலை நீட்டி வைத்திருக்கும் போது விரலில் ஏற்படும் நடுக்கத்தைப் பற்றி இந்த ஹதீஸ் கூறுவதாக வாதிடுகின்றனர்.
இந்த அசைவு விரலில் மட்டும் வராது. தொழுது கொண்டிருப்பவரின் தலையிலும் காலிலும் ஒட்டுமொத்த உடம்பிலும் இருக்கத்தான் செய்யும். இவற்றைப் பற்றி அறிவுள்ள யாரும் பேசமாட்டார்கள்.
இந்த ஹதீஸை ஆரம்பித்திலிருந்து கவனித்தால் தொழுபவர் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றாக்க் கூறப்படுகின்றது. அந்த வரிசையில் தான் விரலசைப்பதும் சொல்லப்படுகின்றது.
நடுக்கம் என்பது நமது விருப்பம் இல்லாமல் உடலில் ஏற்படக்கூடியது. ஆனால் இந்த செய்தியில் கூறப்படும் விரலசைத்தல் என்பது தொழுபவர் விரும்பி செய்ய வேண்டிய காரியமாக்க் கூறப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் விரல் நடுங்கியது என்று கூறப்படாமல் நபியவர்கள் அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுவதால் இது நபியவர்கள் விரும்பி செய்த தொழுகையின் காரியங்களில் ஒன்று என்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
விரலை அசைக்க வேண்டுமா? அல்லது கைகளையா?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸில் உள்ள சில வார்த்தைகளை வைத்து சிலர் குதர்க்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
18115حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ أخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ ثُمَّ قَالَ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنْ الْبَرْدِ رواه أحمد
நபி (ஸல்) அவர்கள் தமது விரலை உயர்த்தினார்கள். பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இதன் பிறகு குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். குளிரின் காரணத்தால் அவர்கள் போர்த்தியிருந்த ஆடைகளுக்குள் அவர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்ததை கண்டேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஜ்ர் (ரலி)
நூல் : அஹ்மது (18115))
 நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்று இந்த அறிவிப்பில் உள்ளது. எனவே விரலசைப்பதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாக்க் காட்டுபவர்கள் விரலை அசைக்காமல் இந்த செய்தியில் உள்ளவாறு கைகளை அசைக்க வேண்டும் என்று குதர்க்கம் செய்கின்றார்கள்.
இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் கூறப்பட்டு அதை நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாக்க் காட்டினால் இவர்களின் கேள்வி நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற தகவலும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஒரு காலத்தில் நான் மதீனா வந்த போதும் இது போல் நபித்தோழர்கள் நடந்தனர் என்று வாஇல் பின் ஹுஜ்ர் கூறுகிறார். அறிவிப்பவர் எந்தக் கருத்தில் இதைச் சொன்னார் என்று தெளிவாக தெரியும் போது அவர் சொல்லாத கருத்தை அவரது வாசகத்துக்கு கொடுப்பது அநியாயமாகும்.
எனவே இங்கே நபித்தோழர்களின் விரல்கள் அசைந்து கொண்டிருந்தது என்ற அர்தத்தில் தான் கைகள் அசைந்தது எனக் கூறப்பட்டுள்ளது. இதை ஹதீஸின் முன் பகுதி வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றது.
இவ்வாறு பேசக்கூடிய வழக்கம் அனைத்து மொழிகளிலும் உள்ளது. உதாரணமாக ஏதாவது ஒரு விரலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்தால் விரலில் என்ன காயம்? என்று கேட்போம். இதையே சற்று வித்தியாசமாக கையில் என்ன காயம்? என்றும் கேட்போம்.
விரல் கையின் ஒரு பகுதியாக இருப்பதால் அதையே கை என்று கூறும் வழக்கம் மக்கள் பேச்சில் சர்வசாதாரணமாக இருக்கக்கூடியது தான். இந்த அடிப்படையில் தான் நபித்தோழர்களின் கைககள் அசைந்து கொண்டிருந்தது என இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
குளிரின் காரணத்தால் கைகள் அசைந்ததா?
நபித்தோழர்கள் யாரும் விரும்பி விரலசைக்கவில்லை. குளிரின் காரணத்தால் தான் அவர்களுடைய கைகள் அசைந்தது. எனவே எல்லா நேரங்களிலும் விரலசைப்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர்.
குளிரின் காரணத்தால் தான் நபித்தோழர்களின் கைகள் அசைந்தது என்ற வாதம் தவறான வாதம். நபிமொழியை திரித்துக் கூறும் செயலாகும்.
தொழுது கொண்டிருந்த நபித்தோழர்கள் குளிரின் காரணத்தால் ஆடையை போர்த்தி இருந்தார்கள் என்று தான் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. கைகள் அசைந்ததற்கு குளிர் தான் காரணம் என்பது இவர்களின் சுய கற்பனையாகும்.
குளிர் வந்தால் கைகள் மட்டும் அசையாது. ஒட்டுமொத்த உடம்பும் அசையும். ஆனால் இந்த ஹதீஸில் கைகள் மட்டும் அசைந்தது என குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே இதற்கு குளிர் காரணமாக இருக்க முடியாது என்பதை அறியலாம்.
மேலும் தாரமியில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் நபித்தோழர்கள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي
இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தைப் பார்த்தேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஜ்ர் (ரலி)
நூல் : தாரமீ (1323)
எனவே நபித்தோழர்கள் குளிரின் காரணத்தினால் ஆடையைக் கூடுதலாக தங்கள் மீது போர்த்தியிருந்தனர். அந்த ஆடைகளுக்குள் தங்களின் சுய முயற்சியால் தான் விரலை அசைத்துள்ளார்கள்.
இருப்பில் விரலை அசைக்கும் விதம்
விரலை எவ்வாறு அசைக்க வேண்டும்?
எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் நம்மால் பதில் கூறவே முடியாது என்று நினைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாத கேள்விகளை நம்மிடத்தில் கேட்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு கியாமத் நாள் வரை பதில் சொல்ல முடியாது என்று வீண் சவடாலும் விடுகின்றனர்.
1.            விரலசைத்தல் எந்த்த் திசையை நோக்கி இருக்க வேண்டும்.
2.   விரலை நீட்டி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா? அல்லது குறுக்கி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா?
3.            விரலை மேலும் கீழுமாக அசைக்க வேண்டுமா?
4.            முன்னாலும் பின்னாலுமாக ஆட்ட வேண்டுமா?
5.            தொடர்ந்தா அல்லது விட்டுவிட்டா?
6.            வேகமாகவா அல்லது மெதுவாகவா?
7.            வலது பக்கமா? அல்லது இடது பக்கமா?
இது போன்ற கிருக்குத்தனமாக கேள்விகள் இவர்களிடத்திலும் எழுமே என்ற அறிவு கூட இவர்களுக்கு இல்லை. இவர்கள் விரலை அசைக்காமல் நீட்டி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்போது இவர்கள் நம்மிடம் கேட்டது போன்ற கேள்வியை இவர்களிடம் கேட்க முடியும்.
1.            விரலை நீட்ட வேண்டும் என்றால் எந்த திசையை நோக்கி நீட்ட வேண்டும்?
2.            வலது பக்கமாக நீட்ட வேண்டுமா?
3.            இடது பக்கமாக நீட்ட வேண்டுமா?
4.            விரலை வானத்தை நோக்கி மேலே இருக்கும் வண்ணம் நீட்ட வேண்டுமா?
5.            தரையை நோக்கி இருக்குமாறு கீழே நீட்ட வேண்டுமா?
6.            அல்லது இரண்டுக்கும் மத்தியில் சீராக நீட்ட வேண்டுமா?
இதுபோன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் நபிமொழியை உதாசீனப்படுத்தி நபிவழியைக் கிண்டல் செய்பவர்கள். ஒரு நல்ல ஆய்வாளரிடத்தில் இப்படிப்பட்ட கேள்விகள் வர முடியாது.
இது தொடர்பாக வந்துள்ள நபிமொழிகளை இறையச்சத்துடன் படித்தால் விரலசைக்கும் விதத்தை அறிந்து கொள்ள முடியும்.
எந்த்த் திசையை நோக்கி விரலசைக்க வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் இஷாரா செய்தார்கள் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்களை நாம் ஏற்றுக் கொள்வோம். விரலசைப்பது தொடர்பாக வரும் ஹதீசும் இஷாரா செய்தார்கள் என்று கூறும் ஹதீசும் ஒரே பொருள் கொண்டவை என்பது நமது நிலைபாடு.
இந்த ஹதீஸில் விரல் கிப்லாவின் திசையை நோக்கி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
1148أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ لَا تُحَرِّكْ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنْ الشَّيْطَانِ وَلَكِنْ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ فِي الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ رواه النسائي
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
"நபி (ஸல்) அவர்கள் தமது வலக்கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, பெருவிரலுக்கு அடுத்துள்ள (சுட்டு) விரலால் "கிப்லா' பக்கம் சைகை செய்தார்கள். தமது பார்வையை அதை நோக்கி அல்லது அதன் பக்கம் செலுத்தினார்கள்'' என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தேன்'' என்றும் கூறினார்கள்.
நூல் : நஸாயீ (1148)
விரல் கிப்லாவை முன்னோக்கி இருக்க வேண்டும் என்றால் வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ அசைக்கக் கூடாது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
அப்படியானால் விரலசைத்தல் மேலும் கீழுமாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.
விரலை முன்னாலும் பின்னாலும் ஆட்ட வேண்டுமா? என்ற கேள்வி முட்டாள்தனமாது. வலது கையை வலது தொடையின் மீது வைத்திருக்கும் போது விரல் மட்டும் முன்னாலும் பின்னாலும் செல்ல முடியுமா? என்பதை இந்த அறிவிலிகள் உணர வேண்டும்.

No comments:

Post a Comment