Sunday, June 03, 2012

பொருளியல் தொடர்: 22

கடனை தள்ளுபடி செய்வதன் சிறப்பு.
அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், "நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்'' என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?'' என்று கேட்டார்கள். அவர் "அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்'' என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 3184
கடனைத் தள்ளுபடி செய்வதால் எவ்வளவு பெரிய சிறப்பு இருக்கிறது என்பதைப் பாருங்கள். நபித்தோழர்கள் மறுமை வாழ்வின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்; கஷ்டப்படுகிறேன் என்று சொன்னவுடன் எப்படி கட்டுப்பட்டு நடந்தார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பிரச்சனை ஏற்பட்டால்....
கடன் வாங்கிய ஒருவனுக்கும் கடன் கொடுத்த ஒருவனுக்கும்  பிரச்சனை ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சிக்கு வழக்கு முறையாக வந்து, அதை விசாரித்துப் பார்த்தால் கடன் வாங்கியவன் திருப்பிக் கொடுப்பதற்கு வசதியில்லாமல் இருக்கிறான். அவனிடத்தில் இருப்பது, கடனை விடக் குறைவாக உள்ளது. இந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய ஆட்சி எப்படித் தீர்வு அளிக்கவேண்டும்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருக்குத் தர்மம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3170
கடனை எழுதிக் கொள்ளுதல்
ஒருவரிடம் கடன் வாங்கும் போது அவரிடத்தில் எழுதிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதனிடம் நல்ல முறையில் பழகிவிட்டோம் என்றால் அவரிடம் கடன் வாங்கும் போது "எழுதிக் கொள்ளுவோம்' என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார்? "என் மீது உனக்கு நம்பிக்கையில்லையா? எப்படி எல்லாம் நாம் பழகியிருக்கிறோம்' என்று கூறுவார்.
இந்த நேரத்தில் அல்லாஹ் எப்படிப் பாதுகாக்கிறான் என்பதைப் பாருங்கள். அதாவது உங்கள் மீது எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை தான் என்றாலும் அல்லாஹ் எழுதச் சொன்னதற்காக இதை எழுதுகிறோம் என்றால் பேச்சு முடிந்துவிடும். அண்ணன் தம்பியிடம் கடன் வாங்கும் போது அல்லது தம்பி அண்ணனிடம் வாங்கும் போது, "எப்படி எழுத முடியும்?' என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லா விட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவு படுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:282
இதை ஏன் அல்லாஹ் கட்டளை இட்டுச் சொல்கின்றான் என்றால் இன்றைக்குக்  கடன் வாங்கியவன் கடனைக் கொடுக்காமல் மறுத்து விடுவதையும், வாங்கியதை இல்லை என்று சொல்வதையும் பார்க்கிறோம் 
கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1. முதலில் அடிப்படையை, அதாவது கடன் வாங்கியதையே மறுத்து விடுவான்.
2. எவ்வளவு தொகை என்பதில் பிரச்சனை ஏற்படலாம்.
3. தவணை விஷயத்தில் பிரச்சனை எழலாம்.
கடனை எழுதும் முû
இந்தக் காலத்தில் அரசாங்க சட்டத்துக்கு உட்பட்டு எழுத வேண்டும்.  நம்முடைய இஷ்டத்துக்கு எழுதக் கூடாது. அன்றைய காலத்தில் ஒரு துண்டில் எழுதினார்கள் என்றால் அது அந்தக் காலத்துக்குப் பொருத்தமாக இருந்தது. இப்போது எப்படி எழுதினால் அதைத் திருப்பி வாங்க முடியுமோ அப்படி எழுதிக் கொள்ள வேண்டும்.
அப்படி எழுதிக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்குமானால் அடமானம் வாங்கி விட்டுக் கொடுங்கள். அப்படி இல்லாமல் அவரை நன்றாக நம்புகிறீர்கள் என்றால் கொடுத்து கொள்ள முடியும். ஆனால் தவறு நடந்தால் மார்க்கத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது.
நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:283
தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஒழுக்கத்தை ஓய்க்கும் ஒலிம்பிக் சங்கம்
உலகெங்கிலும் பெண்களின் ஒழுக்க வாழ்க்கை சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கையில் சவூதி அரேபியாவில் ஓரளவுக்குப் பெண்களின் கற்பு நெறியும் கட்டுப்பாடும் காக்கப்பட்டு வருகின்றது. அதற்குக் காரணம் கொஞ்ச நஞ்சம் அங்கே இருக்கின்ற இஸ்லாமிய நெறி தான். இந்த இஸ்லாமிய நெறியைக் கழுத்து நெறிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் முயற்சியைக் கையாண்டு வருகின்றன.
சவூதியில் பெண்களுக்குரிய அனைத்து சுதந்திரமும் கிடைப்பதில்லை; காரணம் அங்கு ஜனநாயகம் இல்லை என்று மேற்கத்திய நாடுகள் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூக்குரல்களுக்கும் கூப்பாடுகளுக்கும் பயந்து குவைத் போன்ற நாடுகளில் பெண்களும் அரசியலில் குதிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கும் வாசல் திறக்கப்பட்டு விட்டது. சவூதியிலும் பெண்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் சவூதி மன்னர் அனுமதி வழங்கியிருக்கின்றார்.
ஏற்கனவே சவூதியைச் சுற்றியுள்ள நாடுகள் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் பெண்களுக்குரிய ஆடைகளில் கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. இந்தச் சீரழிவு சவூதியையும் பாதிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27 அன்று தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது. அதில் பின்வருமாறு கருத்தை வெளியிட்டிருந்தது.
சவூதி தனியார் பள்ளிக்கூடங்களில் பெண் மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சவூதியின் கிழக்கு மாகாணப் பகுதிகளில் அரசுப் பள்ளிக்கூடங்கள், மாணவிகளுக்கான விளையாட்டுக்களை பகிரங்கமாகவே ஊக்குவிக்கின்றன. சவூதியில் பெண்கள் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்வதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் அனுமதியில்லை. இப்படி ஒரு காலகட்டத்தில் சவூதி மகளிர் பள்ளிக்கூடங்களில் கூடைப்பந்து விளையாட்டுக் கம்பங்கள், வளையங்கள் நட்டப்பட்டு வருகின்றன. தடையை மீறி நடைபெறும் இந்த ஏற்பாடுகள் சவூதியில் வீசுகின்ற காற்றின் திசை மாற்றத்தை அறிவிக்கின்றன.
இதுவரையில் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பெண்களை அனுப்பாத நாடுகள் சவூதி அரேபியா, கத்தார், புருணை ஆகிய மூன்று நாடுகள் தான். இவற்றில் கத்தாரும் புருணையும் இவ்வாண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பெண்களை அனுப்ப இசைந்துள்ளன.
இவை இவ்வாறு முன்வந்ததற்குக் காரணம், "உங்கள் நாட்டுப் பெண்களையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பவில்லை என்றால் உங்கள் நாடு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்படும்; ஆண்களை மட்டும் போட்டிக்கு அனுப்பி விட்டுப் பெண் வீராங்கனைகளை விளையாட்டுக்கு அனுப்பாமல் விடுவது பாரபட்சமான, அநீதியான நடைமுறையாகும். எனவே இந்தப் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது'' என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த எச்சரிக்கைக்கு இவ்விரு நாடுகளும் பணிந்து விட்டன. சவூதி இன்னும் பணிய மறுக்கின்றது. அதனால் சவூதிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.
இது தான் இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தீட்டியுள்ள தலையங்கத்தின் சாராம்சம்.
இன்றைக்கு விளையாட்டு என்ற சாக்கில், சுதந்திரம் என்ற போர்வையில் பெண்களை ஆடவிட்டு அவர்களது அங்க அவயங்களை அங்குலம் அங்குலமாக ரசிக்கின்ற ஆண் வர்க்கத்தின் ஆதிக்க வெறியின் உச்சக்கட்ட அறிவிப்பு தான் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் இந்த எச்சரிக்கை!
சவூதியில் உள்ள பெண்கள் மட்டும் தங்களின் உடல் அழகை எங்களின் காமக் கொடூரக் கண்களுக்கு விருந்து படைக்க முன்வருவதில்லை என்று ஏங்குவோர் எழுப்புகின்ற எக்காளக் குரல் தான் இந்த எச்சரிக்கை!
டென்னிஸ் விளையாடுகின்ற ஆண்களின் ஆடையையும் அதே விளையாட்டை விளையாடும் பெண்களின் ஆடையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களின் வக்கிர புத்தியைப் புரிந்து கொள்ளலாம்.
ஆண் வீரர்கள் முட்டுக்கால் வரை கீழாடையும் கழுத்தை ஒட்டி மேலாடையும் அணிந்து விளையாடுகின்றனர். ஆனால் டென்னிஸ் விளையாடும் பெண்களோ பின்பக்கம் தெரியும் அளவுக்குக் குட்டைப் பாவாடையும் மார்பு தெரியும் அளவுக்கு டி-சர்ட்டும் அணிந்து கொண்டு ஆபாச ஆட்டம் போடுகின்றனர். பெண்களைக் கவர்ச்சிப் பொருளாக்கி அவர்களை ரசிக்க நினைக்கும் ஆணாதிக்க வெறியர்களின் சபலத்தை இதிலிருந்து அறிய முடியும்.
இந்தியாவில் சமீபத்தில் பிரபலமாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பெண்களுக்கு இடமில்லை என்பதால் "சியர் கேர்ல்ஸ்' எனப்படும் ஆபாச நடனக்காரிகளை மைதானத்தில் ஆடவிட்டு அழகு பார்க்கின்றனர். காபரே நடனத்தை மிஞ்சும் இந்தக் காம நடனத்தை கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யும் கொடுமையும் நடக்கின்றது.
அன்றாடம் உலகெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை பன்மடங்குப் பரிமாணங்களாகப் பெருகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணமே பெண்களின் ஆபாசமான அரை நிர்வாணமான ஆடைகள் தான்.
இவை தான் இந்த வன்கொடுமைகளின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. அதனால் தான் இஸ்லாம் அதற்கு ஒரு கடிவாளத்தையும் கட்டுப்பாட்டையும் விதிக்கின்றது. இது சவூதியில் பேணப்படுகின்றது. இதற்குக் காரணம் அங்குள்ள ஷரீஅத் சட்டம். இதன் காரணமாகத் தான் அங்கு பாலியல் வன்கொடுமைகளின் விகிதாச்சாரம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.
அதுபோன்று பெண்களைப் பகிரங்கமாக ஆடவிட்டு, அழகை வியாபாரமாக்கும் பக்கா விபச்சாரத் தொழிலான திரைப்படத் துறையும் அங்கு இல்லை. இதன் காரணமாகவும் அங்கு பிற நாடுகளில் உள்ளது போன்ற விகிதாச்சாரத்தில் பாலியல் வன்கொடுமைகள் இல்லை.
நீச்சல் போட்டி, கபாடி போட்டி, கூடைப்பந்துப் போட்டி, டென்னிஸ் போட்டி, ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்களில் பெண்கள் அரைகுறை ஆடைகளில் அங்கங்கள் குலுங்க விளையாடுகின்ற வாய்ப்புகள் சவூதியில் இல்லை.
சானியா மிர்ஸா போன்ற விரச, விபச்சார விளையாட்டுக்காரிகள் தன்னுடன் விளையாடுகின்ற ஆண் ஜோடியை பகிரங்கமாக மைதானத்திலேயே கணவன் மனைவி போன்று கட்டி அணைக்கும் கேடுகெட்ட ஆபாசமும் அங்கு இல்லை.
இதுபோன்ற விளையாட்டுக்களுக்கு சவூதியில் அனுமதி இல்லாததால் தான் அங்கு பாலியல் கொடுமை மற்றும் விபச்சாரங்கள் மலிவாக நடப்பதில்லை.
இதனால் பெண்களுக்கு விளையாட்டுப் பயிற்சியே தேவையில்லை என்று இஸ்லாம் சொல்லவில்லை. இந்த விளையாட்டு உள் அரங்கத்தில் இருக்க வேண்டும். வெளியரங்கத்தில் இருக்கக் கூடாது. அன்னிய ஆடவர்களின் கண்களுக்கு, காமப் பார்வைக்கு விருந்தாக இருக்கக்கூடாது. இதை சவூதியில் ஷரீஅத் சட்டம் பாதுகாத்து வருகின்றது.
அந்நாட்டை உடைத்து, ஒழுக்கரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்பதே இந்த ஒலிம்பிக் சங்கம் எனும் மேற்கத்தியக் கைக்கூலிகளின் உள்நோக்கம். இதற்கு சவூதி அரசு பலியாகாமல் இருக்க வேண்டும்.
கத்தார் போன்ற நாடுகள் இதற்குப் பலியானதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இங்குள்ள மன்னர் அடுத்த நாட்டுக்கு அரசு முறைப் பயணம் செல்கின்ற போது தன்னுடைய மனைவியை இஸ்லாமிய ஆடையுடன் அழைத்துச் செல்வதற்குத் தயாரில்லை. அந்த அளவுக்கு அரபக அரசர்கள் மார்க்கத்தை விட்டுத் தங்களை அன்னியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த ஆட்சியதிகாரம் ஏகத்துவம் எனும் பாக்கியத்தால் கிடைத்தது என்பதை மறந்து விட்டனர். ஓரளவுக்கு மார்க்கப் பிடிப்புள்ளவர்கள் வாழும் கத்தார் போன்ற நாட்டின் கதியே இப்படியென்றால் புருணை போன்ற நாடுகளைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
ஒலிம்பிக் தடையினால் கிடைக்கப்போகும் அதிகப்பட்சத் தண்டனை என்ன? ஆண்களை விளையாட விடாமல் தடுப்பார்கள். இதனால் இந்த நாடுகளுக்கு என்ன குடிமுழுகி விடப் போகின்றது என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
ஆண் பெண் சரி நிகர் சமம் என்ற பெயரில் இராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்களைப் பணிக்குச் சேர்த்து, அதனால் ஆங்காங்கு பாலியல் விவகாரங்கள் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதை இந்த நாடுகள் உணர்ந்தால் பெண்கள் விஷயத்தில் மார்க்கம் சொல்கின்ற இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்தவும் தகர்க்கவும் முன்வரமாட்டார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டு என்ற பெயரில் இஸ்லாமிய நாடுகளின் மகளிர் ஒழுக்கத்தை வீழ்த்த உலகளாவிய சதியே நடக்கின்றது. இந்தச் சதிக்கு முஸ்லிம் நாடுகள் பலியாகி விடக்கூடாது.
ஒலிம்பிக்கில் பெண்கள் பங்கெடுப்பதை விமர்சிக்கின்ற நாம் ஆண்கள் வீர, தீர விளையாட்டுக்களில் பங்கெடுப்பதை விமர்சிப்பதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்

No comments:

Post a Comment